மைக்ரோசாப்ட் கேமிங் சிஇஓ ஆக வம்சாவளி இந்தியர் ஆஷா சர்மா நியமனம்
நமது நிருபர்
உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசாப்ட், தனது விளையாட்டுப் பிரிவான Microsoft Gaming நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஷா சர்மாவிடம் ஒப்படைத்துள்ளது.
யார் இந்த ஆஷா சர்மா?
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆஷா சர்மா, 43. இவர், மின்னசோட்டா பல்கலையின் கார்ல்சன் மேலாண்மை பள்ளியில் பட்டம் பெற்றவர். நவீன தொழில்நுட்பப் பொருளாதாரம், சந்தை, சமூக வலைதளங்கள், கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு என பலதரப்பட்ட துறைகளில் படிப்பும் அனுபவமும் கொண்டவர்.
இவர், மைக்ரோசாப்ட்டில் செயற்கை நுண்ணறிவு (CoreAI) பிரிவின் தலைவராக பணிபுரிந்து வந்தார். மெட்டா நிறுவனத்தின் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரிவுகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது பணி பலரது பாராட்டுகளையும் பெற்றது. சிஇஓ சத்யா நாதெல்லாவின் கவனத்தையும் ஈர்த்து இருந்தது.
முக்கிய பொறுப்பு
தற்போது மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவின் தலைவராக உள்ள பில் ஸ்பென்சர் தனது 38 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் அந்த பொறுப்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஷா சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
ஏஐ தொழில்நுட்ப துறையில் அனுபவம் பெற்றுள்ள ஆஷா சர்மாவின் திறமை, கேமிங் துறையில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவன தலைமைப் பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினரின் ஆதிக்கம் தொடர்வதை உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக இந்த நியமனம் உள்ளது.
25வது ஆண்டு
விஸ்கான்சினில் பிறந்த 43 வயதான ஆஷா சர்மாவை, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா பாராட்டி உள்ளார். ''கேமிங் துறையில் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டுவதற்கு ஆஷாவின் அனுபவம் பெரிதும் உதவும் '' என்று சத்யா நாதெல்லா தெரிவித்து இருக்கிறார்.
2026ம் ஆண்டு மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவு தொடங்கி 25வது ஆண்டு நிறைவு பெறுகிறது. தற்போது எக்ஸ்பாக்ஸ் தளத்திற்கு மாதந்தோறும் 50 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர்.
''கேமிங் என்பது ஒரு கலை; அது மனிதர்களால் உருவாக்கப்பட வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவை முதன்மையான ஒன்றாக மாற்றுவதே தனது இலக்கு'' என ஆஷா சர்மா தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனது முடிவை பகிர்ந்து இருக்கிறார்.
சாதனையை பார்த்தீர்களா, ஆஷா சர்மாவை CEO -வாக மாற்றியது திராவிட மாடல், திராவிட மாடல்னா என்ன என கேட்போருக்கு இதுதான் பதில் - விடியலார்..
சர்மா ????
தமிழ் நாட்டில் தமிழ் பேசும் விடியல் திராவிடனுங்க கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறானுங்க .....
சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களை உருவாக்கி சாதனை புரியும் பாரதத்தில் உள்நாட்டு சர்வதேச MNC நிறுவனங்கள் எதுவுமே உருவாக முடியாது. ஏனெனில் இங்கு லாபம் என்பது பாவம். நியாயமாக தொழில் மூலம் சம்பாதிப்பவர்கள் அம்பானி, அடானி போல திட்டு வாங்குவார்கள். குவாரி, மணல், மெத் கடத்தல், லஞ்ச ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கே மரியாதை.
பாராட்டுகள்மேலும்
-
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுவுக்கு தான் பயம்: இபிஎஸ்
-
ஏஐ மாநாட்டை இழிவான அரசியல் தளமாக மாற்றிய காங்கிரஸ்: பிரதமர் மோடி கண்டனம்
-
பாக்., எல்லை அருகே இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் துப்பாக்கிச் சூட்டில் பலி; பயங்கரவாதிகள் செயலா என விசாரணை
-
பெரம்பூரில் விஜய் போட்டி?
-
3 விக்கெட்டை இழந்து தென் ஆப்ரிக்கா தடுமாற்றம்; இந்தியா சிறப்பான பந்துவீச்சு
-
திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது... திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு