திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது... திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு
என்ன செய்கிறது திமுக அரசு?
அவரது அறிக்கை; திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 பயங்கரவாதிகளை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். பயங்கரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய திமுக அரசு என்ன செய்தது? டில்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை தமிழக போலீசார் என்ன செய்துகொண்டு இருந்தனர்? தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மத்திய என்ஐஏ அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
இன்றும் ஏற்க மறுப்பு
கடந்த 2022ம் ஆண்டு, கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக பயங்கரவாத தாக்குதலை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து, பலரை கைது செய்து, பயங்கரவாதத் தாக்குதல் என்பதை உறுதி செய்தது. பல்வேறு வெடிபொருள்கள், ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு, 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் என அனைத்தும் அம்பலமானது.
ஆனால் குண்டுவெடிப்பு என்பதை ஏற்க மறுத்து சிலிண்டர் வெடிப்பு என்று இன்றளவும் தமிழக முதல்வர் ஸ்டாலினும், திமுகவினரும் கூறி வருகின்றனர். தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு மக்களின் பாதுகாப்பை பற்றி எந்த கவலையும் இல்லை. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள், அமைப்புகளுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருகிறது.
விஷம பிரசாரம்
வாக்குவங்கி அரசியலுக்காக மக்களின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிடும் போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவைப் போலவே, அவர்களது பங்காளிகளும் இதையே செய்கிறார்கள். கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய கோரி ஓயாது விஷம பிரசாரம் செய்து வருபவர்களும் திமுக கூட்டணி கட்சியினரே.
தமிழக மக்கள் அனைவருமே விழித்துக் கொள்ள வேண்டிய தருணமிது. பயங்கரவாத்திற்கு எதிராகவும், பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராகவும் கரம் கோர்த்து மக்கள் செயலாற்ற வேண்டும். அனைவரும் வேறுபாடு இல்லாமல் பயங்கரவாதத்துக்கு எதிராக விழிப்புணர்வுடன் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினருக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்,இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது; அனைத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மார்ச் 1ம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டம் திமுகவை வீட்டிற்கு அனுப்புவதற்கான கூட்டமாக இருக்கும். ஏற்கனவே மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டம் முடிவு செய்தது.
வீட்டு வாசலில் விளக்கு
மதுரையில் நடைபெறும் கூட்டம் அதை உறுதி செய்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது பக்தர்கள் சார்பாக பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. முருக பக்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போராட்டம் செய்து வருகின்றனர். அதை நிறைவேற்றும் விதமாக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீதும் தீர்ப்பு வழங்கியதற்காக அவர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என திமுக ஒரு அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். திமுகவிற்கு பாடம் புகட்டும் விதமாகவும் தங்களது உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் பக்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளில், வீட்டு வாசலில் விளக்கேற்றி 23ம் தேதி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும்.
வீட்டுக்கு அனுப்பும் கூட்டம்
பிரதமருடைய வருகை திமுகவை வீட்டிற்கு அனுப்பி விடும். காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் எங்கு செல்வார்கள் என்பதும் தெரியவில்லை.ஆனால் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக வலிமையான கூட்டணியாக உள்ளது. எங்களுடைய கூட்டணியின் தலைவர் பழனிசாமி பல கட்சிகளுடன் பேசி வருகிறார்.
விஜயகாந்த் ஆன்மா
பீஹார், ஹரியானா, மஹாராஷ்டிரா உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் இரட்டை இன்ஜின் அரசை தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.எம்ஜிஆர் இருக்கும்போது மத்தியிலும் மாநிலத்திலும் அனுகூலமான ஆட்சி நடத்தினார். மக்களே மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி இருந்தால் தான் தமிழகத்திற்கு வளர்ச்சி ஏற்படும் என்பதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். திமுகவுடன் பிரேமலதா கூட்டணி அமைத்தது, உண்மையிலேயே இந்த கூட்டணியை விஜயகாந்த் ஆன்மா ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
விஜயகாந்தின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறோம். அவர் கட்சி ஆரம்பித்தது திமுகவுக்கு எதிராக தான் வாழ்நாள் முழுவதும் திமுகவிற்கு எதிரான அரசியல் செய்து வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
பாரத தேசம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் முதலில் ஒற்றை தமிழகத்தை பிரித்து சிதறடியுங்கள்... திராவிடம் அழியாமல் தேசியம் வளறாது.. சாராயம் பிரியாணி போதை தேசத்துரோகம் மட்டுமே திராவிடத்தின் உயிர் மூச்சு.. திராவிடத்தை ரத்தச் சிதறலாக்கி அழிக்க உங்களுக்கு துணிச்சல் இல்லையோ என்ற ஐயம் எழுகிறது..
தமிழ்நாட்டில் பொதுவாக வட மாநிலங்களில் இருந்து வருபவர்கள் பீகார் போன்ற இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மட்டும்தான் இங்கு குறி வைக்கப் படுகின்றனர். ரயிலில் கஞ்சா போதையுடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது,வருபவர்கள் 2 கிலோ கஞ்சா பையுடன் வருகிறார்கள் ஒரு அமைச்சரின் குற்றச்சாட்டு இவை எல்லாம் இவர்களை மட்டுமே குறிவைத்து நடத்தப் படுகின்றன. தேச விரோத, நாட்டுக்கு ஆபத்தான பங்காளதேஷிகள் வெளி மாநில போலீசார் இங்கு வந்து விசாரித்து பிறகுதான் நமக்கே தெரிய வந்து பிறகு அவர்கள் கைது செய்யப் படுகிறார்கள். நமது காவல் துறைக்கு இவர்களைப் பற்றி எப்போதுமே எதுவுமே தெரியாதா? இல்லை தெரிந்திருந்தும் அவர்கள் கைகள் கட்டப் பட்டுள்ளதா?
மறைமுக ஆதரவா . உளறல் . வெளிப்படையாகவே திமுக ஒரு ஹிந்து விரோத கிறிஸ்துவ முஸ்லீம் ஆதரவு கட்சி .
As of early 2026, fencing is not finished all along the 4,096.7 km India-Bangladesh border. Approximately 3,240 km about 79% has been fenced, while roughly 856 km remains unfenced due to challenging terrain, riverine gaps, land acquisition delays, and objections. Work continues in phases to secure the remaining, difficult stretches.
Key Details on Fencing Status:
Total Length: 4,096.7 km.
Completed Fencing: ~3,240 km 79.08%.
Unfenced Portion: ~856.7 km 20.92%.
அனைத்திற்கும் குற்றம் சொல்லி சொல்லி பழகிய கூட்டம் இது
முருகா உண்மைய சொன்னா கொத்தடிமை உனக்கு கோவம் வருதா
It's very easy to cross the states in India by traveling in the unreserved compartment
on one of those long distance trains. Nobody is going to check. That's not at all difficult. The big question is how do they even infiltrate into the country?
திமுக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு நேரடியாக உதவி புரிந்தார்கள். போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு நேரடியாக உதவி புரிந்தார்கள். பாலியல்செய்யும் காமுகர்களுக்கு நேரடியாக உதவி புரிந்தார்கள். இப்பொழுது நாட்டின் அமைதிக்கே பங்கம் விளைவிக்கும் பயங்கரவாதிகளுக்கு நேரடியாக உதவி புரிந்துள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது. திமுக நாட்டின் அமைதிக்கு பங்கம். துரத்துவோம் திமுகவினரை நாட்டிவிட்டே.
தமிழ்நாட்டில் election வருதுல்ல... பிஜேபி நாடகம் இனி தொடரும்..
தமிழ்நாட்டுக்கு நிதி இல்ல என்று சொல்லும் பிஜேபி தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்
கேவலம் ஜோத்பூர் ஸ்பெஷல் ஆட்டுபிரியாணி போடுபவன்களுக்கு ஆதரவாக இருப்பது மகாகேவலம் . ஓட்டுப்பிச்சைக்காக பயங்கரவாத கும்பலுங்களுக்கு கூட ஆதரவாக இருக்கிறதே திராவிட மாடல் . இந்த பயங்கரவாத கும்பல்களுக்கும் முட்டு கொடுக்கிறானுங்க கோபாலபுர நிரந்தர கொத்தடிமைகள்
இப்போ திராவிடன் தமிழன் இல்லையா?
வடமாநில ஏஜன்சிகள் மூலமாக அவர்கள் வந்து இருக்கலாம் என்று ஊடகங்களின் செய்திகள் அடிப்படையில் மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
சீனு மூவாயிரம் வாங்கிட்டாயா...அப்போ நீயும் முட்டு குடுக்கலாம்
சிவநாயகம் மொத்தமாக வாங்கிவிட்டார் என்று மக்கள் கூறுகின்றனர்
திமுக அரசு மறைமுகமாக தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கவில்லை. அவர்கள் நேரடியாகவே ஆதரவு அளிக்கின்றனர்.
மத்திய அரசு இதற்கு என்ன செய்கிறது என்று விடியல் திராவிடனுங்க கேள்வி??......பங்களாதேஷ் எல்லையில் வேலி அமைக்க தேவையான நிலத்தை கொடுக்காத மேற்கு வங்க மேடம் மமதா அரசை கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம்..இது தேசிய பாதுகாப்பு விவகாரம், தாமதம் ஒரு கணம் கூட அனுமதிக்கப்படாது என எச்சரிக்கை...2,216 கிலோமீட்டர் எல்லையில் வங்காளம் அமைந்துள்ளது... அதில் 600 கிலோமீட்டர் எல்லை இன்னும் திறந்தே உள்ளது ...இந்த திறந்தவெளி கிடக்கும் இடம் ஊடுருவல் மற்றும் கடத்தலுக்கு உதவுகிறது...மேலும்
-
எஸ்ஐஆர் பணி எதிரொலி; 9 மாநிலங்களில் 1.70 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்
-
பெயருக்கு மட்டுமே விஐபி தொகுதியான சேப்பாக்கம்: உதயநிதி மீது அண்ணாமலை சாடல்
-
அதிமுக ஒன்றுபட யாரும் முயலவில்லை: திருமாவளவன்
-
5 விக்கெட்களை இழந்தது இந்தியா; தென் ஆப்ரிக்கா ஆதிக்கம்
-
முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சு
-
'சீட்' கொடுக்காவிட்டாலும் தேர்தல் வேலை உண்டு: குஷ்பு