தகவல் சுரங்கம்:உலக அமைதி, புரிதல் தினம்

அமைதியான உலகை உருவாக்குவதற்கு பேச்சுவார்த்தை, ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வது முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் உலகின் பெரிய தொண்டு நிறுவனமான ரோட்டரி சங்கம் துவக்கப்பட்ட தினத்தை அங்கீரிக்கும் விதமாக ஐ.நா.,வின் யுனெஸ்கோ சார்பில் பிப்.23ல் உலக அமைதி, புரிதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 1948ல் இருந்து இதுவரை போர், உள்நாட்டு சண்டை நடந்த 70 இடங்களில் அமைதிப்பணியை ஐ.நா., மேற்கொண்டது.

ரோட்டரி சங்கம் 1905 பிப்.23ல் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. இதில் உலகளவில் 14 லட்சம் தன்னார்வலர்கள் உள்ளனர்.

Advertisement