மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்
மும்பை: மஹாராஷ்டிராவில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரணி தாலுகாவில் உள்ள ராணிகான் காட் பகுதியில் உள்ள சிவாழிரி இடத்திற்கு சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டது. குறுகிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வேன், சாலையை விட்டு விலகி, சுமார் 50 முதல் 60 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது.
விபத்து நடந்த இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குறுகிய மலைப்பாதை மற்றும் ஆழமான பள்ளம் என்பதால், மீட்புக்குழுவினருக்கு மீட்புப் பணிகள் பெரும் சவாலாக இருந்தது. உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திட்டத்தில் முறைகேடுகள்: 49 மருத்துவமனைகளை பட்டியலிலிருந்து நீக்கியது குஜராத் அரசு அதிரடி
-
நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு
-
கல்லூரிகளில் ஆசிரியர் நியமனம் இல்லை; இதுதான் தமிழ் வளர்க்கும் லட்சணமா: அண்ணாமலை கேள்வி
-
மாஸ்கோவை குறிவைத்து ட்ரோன்களால் உக்ரைன் தாக்குதல்; மாஸ்கோவில் 4 விமானநிலையங்கள் மூடல்
-
சட்ட விரோத மதமாற்றம்: உ.பி.,யில் பாதிரியார் கைது
-
பணம் கொடுத்தால் ஓட்டு வரும் என்று நினைப்பது தவறு: அண்ணாமலை
Advertisement
Advertisement