பணம் கொடுத்தால் ஓட்டு வரும் என்று நினைப்பது தவறு: அண்ணாமலை
சென்னை: '' திமுக அரசை சிலர் திராவிட மாடல் நிர்வாகம் என சொல்கின்றனர். அதனை ஏமாற்று மாடல் என நாங்கள் சொல்வோம். இந்த தேர்தலுக்கு பிறகு, தமிழக அரசியல் பற்றி விஜய் புரிந்து கொள்வார்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலை கூறியதாவது: பொது க்களுக்கு பணம் வழங்க வேண்டாம் எனக்கூறிவில்லை. பணம் வரும் போகும். அது மக்களுக்கு பலன் அளிக்கும். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்றீர்கள். ஆனால் 28 மாதங்கள் கொடுக்கவில்லை 29 வது மாதம் முதல் கொடுக்க துவங்கினீர்கள். 5 ஆண்டுகள் பொங்கல் பண்டிகை வந்தது. 3 பொங்கல் பண்டிகைக்கு நீங்கள் பணம் கொடுக்கவில்லை.
இதனைத்தான் மக்களிடம் சொல்கிறோம். இதனை திராவிட மாடல் நிர்வாகம் என சிலர் சொன்னால், அதனை மோசடி மாடல் அரசு என சொல்வோம். நீங்கள் 60 மாதம் பணம் கொடுத்து இருந்தால், அதனை பாராட்டி இருப்போம். நீங்கள் 28 மாதங்கள் மறந்துவிட்டீர்கள். அந்த மாதத்துக்கு உரிய தொகையை கொடுக்கவில்லை. அனைத்து பொங்கல் பண்டிகைக்கும் பணம் கொடுக்கவில்லை. திடீரென கோடைகால சிறப்பு நிதியை அறிவித்துள்ளீர்கள். 2024 மற்றும் 2023ம் ஆண்டில் கோடைகாலம் வரவில்லையா?
பணம் கொடுப்பது என்பது முதல்வரின் விருப்பம். பட்ஜெட்டை சரி செய்து கொடுக்க விரும்பினால் அது உங்கள் விருப்பம். அதனை நான் விமர்சிக்கவில்லை. ஆனால், மத்திய அரசு அதனை தடுக்க விரும்புவதாக கூறுவதை தான் விமர்சிக்கிறேன். பணம் கொடுத்தால் ஓட்டு வரும் என நினைப்பது தவறு.
தேர்தலுக்கு முன்னர் நிதி என்ற பெயரில் பணம் கொடுத்வர்கள் தோல்வியடைந்ததற்கு ஜெகன் மோகன், சந்திரசேகர ராவ் ஆகியோர் உதாரணமாக உள்ளனர்.
தவெக ஒரு சக்தி என்பதை மறுக்கவில்லை. இரண்டு ஆண்டுகளே ஆன கட்சிக்கு களத்தில் பார்க்கும் தொண்டர்களின் எண்ணிக்கை நன்றாக உள்ளது. ஆனால் விஜய் களத்தில் இன்னும் நிற்க வேண்டும். கரூர் விவகாரத்தை இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்க வேண்டும். ஆனால், நான் விஜய் பக்கம் தான் நிற்கிறேன். இந்ததேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் குறித்து விஜய் புரிந்து கொள்வார். அரசியலுக்கு வந்த பிறகும் ஒரு சில விஷயங்களில் விஜய் அமைதியாகவே இருந்து உள்ளார்.
தமிழகத்திற்கு புதியவர்கள் இன்னும் தேவை. களத்தில் இன்னும் விஜய் நேரத்தை செலவிட வேண்டும். அவர் அதிக ஓட்டுகள் வாங்கும் நாள் வரும். அதனை மறுக்கவில்லை. தற்போதைய தேர்தலில் விஜய் பெரிய சக்தியாக இருந்தாலும், மூன்று முனை போட்டியாக கருதவில்லை. கரூரில் நடந்தது போன்று சேலத்திலும் நடந்தது துரதிர்ஷ்டவசமானது. நடுநிலைவாதி எனக்கூறி கொண்டு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மவுனம் காக்கின்றீர்கள்.
தேர்தல் காலம் மிகவும் முக்கியமானது. அதனை அவர்கள் எப்படி கையாள போகிறார்கள் என்பது முக்கியம். 2024 லோக்சபா தேர்தலில் தேஜ கூட்டணியில் அதிமுக இல்லை. 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக உள்ளது. எங்களது இலக்கு ஒன்று தான். நாங்கள் எங்கள் கூட்டணியுடன் இணக்கமாக உள்ளோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
ஒருபக்கம் பணத்தை விநியோகம் செய்துவிட்டு, மறுபக்கம் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கொடுத்த பணத்தை திரும்ப வசூலித்துவிடுகிறது இந்த திருட்டு திமுக. மக்களுக்கு அது புரியவில்லை. ஏன் என்றால் போதை தெளியவில்லை.
எப்புடி ஓட்டு வரும்?
பணம் கொடுப்பதை எதிர்த்து பிஜேபி வழக்கு போடுமா என்று திமுக எதிர்பார்க்கிறது. காரணம் நிதி நெருக்கடி? திமுக தன்னை தானே தோற்கடிக்கும் நிலையில் உள்ளது. தற்போது வாக்காளர் பட்டியலில் உள்ள வேட்பாளர் சரியானவரா என்று திமுகவை எதிர்க்கும் கட்சிகள் சந்தேகிக்கும் நபர் முகவரிக்கு சாதி, மத நல்லிணக்கம் உருவாக்க அழைப்பு என்று பதிவு தபால் அனுப்ப முடியும். அப்போது திரும்பி வரும் தபால் சில உண்மை புரிய வைக்கும்.
கோவை தேர்தலில் அண்ணாமலையை தோற்கடித்தது யார் ?
பணம்தான்
பீகார் மஹா இங்கெல்லாம் நாம ஜெயிச்சது எப்படி சார்? கண்ணாடி பார்த்து விட்டு பேசுங்க
இந்த எண்ணத்தில் உங்கள் எண்ணம் தவறு. நிச்சயம் கொடுப்பது நிச்சயயம் தாக்கதை யேற்படுத்தும் பணம் கொடுத்து ஒட்டு வாங்கிகுபவனுக்கு நிச்சயம் தெரியும். ஒட்டு அறுவடையை செய்யமுடியும் என்று. மக்களின் மனா நிலையை நிச்சயம் நங்கு அறிந்தவன் சும்மா ஒன்றும் கொடுக்க மாட்டான். தீ முகா காரன் என்பது குறுக்கு வழி புத்திகாரன். அப்பன் பிள்ளை இது தொன்று தொட்டுவரும் கையவந்த பழக்கம். தவிர கொஞ்சம் ஆந்திரா வாசனையுடையவன். அதனால் குறுக்கு வழி பித்தலாட்டம் கை வந்த கலை. ஊரான் வீட்டு என என் பொண்டாட்டி கையெ தான். கடை தேங்கைய்ய எடுத்து வழி பிள்ளையாருக்கு ஓடைய்யப்பது
பத்தாயிரம் கொடுத்து பீகாரில் வெற்றி பெற்ற போது எங்கே இருந்தீர்கள்
முருகன் மண்டியிட்டு வாங்கிய மூவாயிரம் ரூபாய்க்கு நன்றியோடு கருத்து போடுகிறார்
மஹா, மத்திய பிரதேசம் இதெல்லாம் உட்டுட்டியே
மூவாயிரம் வாங்கத உத்தமன் மாதிரி பேசுவது ஏன்
நிதர்சனமான கருத்து. அண்ணாமலை அவர்களால் தான் அரசியலில் நடுநிலையாகவும் ஞாயமாகவும் பேசமுடியும்.மேலும்
-
தனியார் பஸ் கட்டணம் உயர்வு விவகாரம் குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு
-
பகல் நேர மின் தடை கிடையாது
-
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகிறார்: பா.ஜ., ராம சீனிவாசன் பேச்சு
-
காப்பி பேஸ்ட் செய்வது தி.மு.க., தான் கே.பி.முனுசாமி பேட்டி
-
கோடை விடுமுறை பயணம் ரயில்களில் முன்பதிவு துவக்கம்
-
வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்வு