குமார ராமசாமி ராஜாவுக்கு சிலை அமைக்க கோரிக்கை
சென்னை; சென்னையில் முன்னாள் முதல்வர் குமார ராமசாமி ராஜாவுக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கல்வியாளர் நவபாரத் நாராயண ராஜா, ராஜுக்கள் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் வெங்கடேஸ்வரன், ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையத்தை சேர்ந்த குமார ராமசாமி ராஜா தமிழக முதல்வராக கடந்த 1949ம் ஆண்டு முதல் 1952ம் ஆண்டு வரை இருந்தார். பின் ஒடிஷா மாநிலத்தில் கவர்னராக 1954 ல் பணியாற்றினார்.
தனது வீட்டையும் தனது சொத்துக்கள் அனைத்தையும் பொது மக்களின் நலனுக்காக எழுதி வைத்தவர். ராஜபாளையத்தில் பிறந்த மாமனிதர் இவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச்சாலை பல மாதங்கள் சிறை தண்டனை பெற்றவர். இவரின் தியாகத்தை போற்றும் விதமாக அவருக்கு சென்னையில் முழு உருவ சிலை வைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
மேலும்
-
திட்டத்தில் முறைகேடுகள்: 49 மருத்துவமனைகளை பட்டியலிலிருந்து நீக்கியது குஜராத் அரசு அதிரடி
-
நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு
-
கல்லூரிகளில் ஆசிரியர் நியமனம் இல்லை; இதுதான் தமிழ் வளர்க்கும் லட்சணமா: அண்ணாமலை கேள்வி
-
மாஸ்கோவை குறிவைத்து ட்ரோன்களால் உக்ரைன் தாக்குதல்; மாஸ்கோவில் 4 விமானநிலையங்கள் மூடல்
-
சட்ட விரோத மதமாற்றம்: உ.பி.,யில் பாதிரியார் கைது
-
பணம் கொடுத்தால் ஓட்டு வரும் என்று நினைப்பது தவறு: அண்ணாமலை