சிக்கிமில் பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள்; பத்திரமாக மீட்ட இந்திய ராணுவம்
கேங்டாக்: சிக்கிமில் ஏற்பட்ட திடீர் பனிப்பொழிவில் சிக்கிய குழந்தைகள் உள்பட சுற்றுலாப் பயணிகள் 46 பேரை இந்திய ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் சாங்கு - நாதுலா பகுதிகளில் திடீரென வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவு நிலவியது. இதனால், ஜவஹர்லால் நேரு சாலையில் 350க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ஆங்காங்கே சிக்கிக் கொண்டன. பனியில் சிக்கி போராடிக் கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகள் 46 பேரை, ராணுவம், போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்டனர்.
இவர்கள் அனைவரும் 17வது மைலில் உள்ள ராணுவ முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். சாலைகள் சீரமைக்கப்படும் வரை அவர்கள் அங்கேயே தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாக்யாங், கேங்டாக் மற்றும் மங்கன் மாவட்டங்களில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதை முன்னமே ஸ்டாலினிடம் சொல்லியிருந்தால் 4 பஸ் களை அனுப்பி மீட்டிருப்பாரே . இன்னும் உங்களுக்கு திராவிட மாடலே புரியல.
நம்முடைய இந்திய ராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்
அப்றம் ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
செல்ஃபி எடுக்கும் மோகம்...நல்ல நேரம். ராணுவத்தினர் காப்பாற்றினர்....
ஜெய் ஜவான், ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், வந்தே மாதரம்மேலும்
-
திட்டத்தில் முறைகேடுகள்: 49 மருத்துவமனைகளை பட்டியலிலிருந்து நீக்கியது குஜராத் அரசு அதிரடி
-
நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு
-
கல்லூரிகளில் ஆசிரியர் நியமனம் இல்லை; இதுதான் தமிழ் வளர்க்கும் லட்சணமா: அண்ணாமலை கேள்வி
-
மாஸ்கோவை குறிவைத்து ட்ரோன்களால் உக்ரைன் தாக்குதல்; மாஸ்கோவில் 4 விமானநிலையங்கள் மூடல்
-
சட்ட விரோத மதமாற்றம்: உ.பி.,யில் பாதிரியார் கைது
-
பணம் கொடுத்தால் ஓட்டு வரும் என்று நினைப்பது தவறு: அண்ணாமலை