போராட்டம் என்பது இந்தியரின் ஜனநாயக உரிமை: சொல்கிறார் ராகுல்
புதுடில்லி: அமைதியான போராட்டம் என்பது ஒவ்வொரு இந்தியரின் ஜனநாயக உரிமை என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமைதியான போராட்டம் எங்கள் வரலாற்று உரிமை. அது எங்கள் ரத்தத்தில் உள்ளது; ஒவ்வொரு இந்தியரின் ஜனநாயக உரிமையும் ஆகும். பிரதமருக்கு எதிராக நாட்டின் நலனுக்காக அச்சமின்றி குரல் எழுப்பிய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை பற்றி நான் பெருமைப்படுகிறேன்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் நாட்டின் நலன் சமரசம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நமது தரவுகளை அமெரிக்காவின் கைகளுக்கு செல்லும். இந்த உண்மையை நாட்டின் முன் கொண்டு வர முயற்சித்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் மற்றும் பிற நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பது, சர்வாதிகார மனப்பான்மையும் கோழைத்தனமும் என்பதற்கான சான்றாகும்.
காங்கிரஸ் கட்சியும் நானும் எங்கள் நிர்வாகிகளும்நிற்கிறோம். அதிகாரத்திற்கு உண்மையின் கண்ணாடியை காட்டுவது குற்றமல்ல; அது தேசபக்தி. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.
அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக இளைஞர் காங்கிரசார், டில்லியில் நடந்த ஏஐ மாநாட்டில் சட்டையை கழற்றி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
@block_B@
ராகுல் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்து காட்ட முடியுமா என பிரதமர் மோடிக்கு சவால் விடுகிறேன்.. டிரம்ப் விதித்த வரி விதிப்புகளை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள், வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீனை செய்து வருகின்றன. நீங்கள் மவுனமாக இருப்பது ஏன்? உங்களால் செய்ய முடியாது என்பது மக்களுக்கு தெரியும். நீங்கள் அமெரிக்க பிடியில் உள்ளீர்கள். முற்றிலும் அமெரிக்காவிடம் சரண் அடைந்துவிட்டீர்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார். block_B
வாரிசு குடும்ப அரசியல்வாதிகள் ஜனநாயகம் பற்றியெல்லாம் பேசவே அருகதையில்லை
போராட்டம் என்பது இந்தியரின் ஜனநாயக உரிமை. ஆம். உண்மை. ஆனால் நீ இந்தியன் இல்லையே. நீ இத்தாலி பாட்டிக்கு பிறந்த ஒரு பெண்ணின் மகன். அதாவது இத்தாலி குடிமகன். உனக்கு இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட உரிமை இல்லை.
போராட்டம் என்பது வேலைக்கு போகாமல் சோம்பேறியாக காலத்தை கடத்தும் பொறுக்கித்தனம்.
போராட்டம் சரி உரிமை பொறுக்கிதானம்????
ஒரு சர்வதேச மாநாடு அதுவும் என்பத்தைந்திற்கும் அதிமான நாடுகள் பங்கேற்ற பிரம்மாண்டமான மாநாட்டில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகின்ற வகையில் காங்கிரஸார் நடந்து கொண்ட விதம் கண்டிக்க மற்றும் தண்டிக்க பட வேண்டிய குற்றம் இப்படிப்பட்ட இழி செயல்களை நியாயப்படுத்தி பேசும் போக்கு ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல். காங்கிரஸின் சமீபத்திய நடவடிக்கைகளை பார்க்கும் போது மக்களின் கவனத்தை ஈர்க்க எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள் போலிருக்கிறது. ஆனால் அவை அணைத்தும் அவர்களுக்கு எதிராக மாறுவதை உணர்ந்தாக தெரியவில்லை.
ஒரு சர்வதேச மாநாடு அதுவும் என்பத்தைந்திற்கும் அதிமான நாடுகள் பங்கேற்ற பிரம்மாண்டமான மாநாட்டில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகின்ற வகையில் காங்கிரஸார் நடந்து கொண்ட விதம் கண்டிக்க மற்றும் தண்டிக்க பட வேண்டிய குற்றம் இப்படிப்பட்ட இழி செயல்களை நியாயப்படுத்தி பேசும் போக்கு ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல். காங்கிரஸின் சமீபத்திய நடவடிக்கைகளை பார்க்கும் போது மக்களின் கவனத்தை ஈர்க்க எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள் போலிருக்கிறது. ஆனால் அவை அணைத்தும் அவர்களுக்கு எதிராக மாறுவதை உணர்ந்தாக தெரியவில்லை.
இகாங்கிரெஸ் திமுக இந்தி கூட்டணி மாநிலங்களில் இந்த நிறைவான போராட்டம் செய்தால் இவர் நிலை என்ன
இடம் பொருள் ஏவல் என்றால் ஏதானும் தெரியுமா. இது என்ன தாய்லாந்து பாரா? கொஞ்சம் விட்டிருந்தால் முழுக்க அவுத்து போட்டுட்டு ஆடியிருப்பானுக. குடும்ப நாயகன் ஜனநாயகத்தை பற்றி பேசுகிறான். தாய்லாந்து நேபால் சென்று விடு. நீ செய்யும் பித்தலாட்டதால் இருக்கும் சில சீட்களை கூட காங்கிரஸ் பெறப்போவதில்லை.
எதிரிகளின் ஏஜென்ட் தேசே துரோகி தேசவிரோதி இப்படி நாட்டை கேவலப்படுத்துவதை தடை செய்ய வேண்டும் அரசை கண்டிக்கிறேன் என்று அறிவில்லாமல் நிர்வாணமாக தெரு வில்ஓடு வாரா .பொறுக்கி ரவுடித்தனத்தை கடுமையாக தண்டிக்க வேண்டும் இல்லையேல் நாட்டுக்கு அவமானம்
பாதிக்கப்பட்டவர்கள் போராடலாம் நீங்க ஏன் அதை சொல்கிறீர் ? உங்களால் இந்தியா தான் பாதிக்கப்படுதுமேலும்
-
கோவில் சொத்துக்களை பாதுகாக்க தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை:சென்னை ஐகோர்ட் அறிவுரை
-
ஐகோர்ட் உத்தரவிட்டும் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய தாமதம்
-
மீண்டும் 30 ஆண்டுக்கு முந்தைய அதிரடி அரசியல்: எதிர்க்கட்சிகளுக்கு தி.மு.க., மேயர் மிரட்டல்
-
ஆஸ்திரேலியா பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
-
சிதைந்த கனவுகளும்,வாழ்க்கையும்
-
சிதைந்த கனவுகளும்,வாழ்க்கையும்