9 மாத குழந்தை வெட்டிக்கொலை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
திருநெல்வேலி: திருநெல்வேலியில் திருமணத்திற்கு பெண் தர மறுத்ததால் அதிகாலை வீட்டுக்குள் புகுந்து 9 மாத குழந்தையை வெட்டி கொன்ற வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப் பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி தெற்கு மகிழடி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்டர் ரசல் ராஜ். பணகுடியை சேர்ந்த சிவசங்கரன், ரசல் ராஜின் மகளை திருமணம் செய்து வைக்க கேட்டார்.
ரசல் ராஜ் மறுத்ததால் ஆத்திரத்தில் வீட்டுக்குள் புகுந்து அரிவாளால் தாக்கினார்.
இதில் ரசல் ராஜின் மனைவி எப்சிபாய் படுகாயமடைந்தார்.
அருகில் தூங்கிக் கொண்டிருந்த 9 மாத குழந்தை அக்ஸா குயின்சி தலையில் வெட்டுக் காயமடைந்து பின்னர் இறந்தது. ரசல் ராஜூம் காயமடைந்தார்.
திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரனை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை திருநெல்வேலி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
நீதிபதி செல்வம், கொலையாகாத மரணம் விளைவித்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம், கொலை முயற்சி குற்றத்திற்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ.5,000 அபராதம், அத்துமீறி நுழைந்ததற்காக ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்தார்.
தண்டனைகள் ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதால் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.16 ஆயிரம் அப ராதம் விதிக்கப்பட்டது.
மேலும்
-
ஜே.இ.இ., முதன்மை தேர்வு தமிழக மாணவர் 2ம் இடம்
-
கோடை சாகுபடியை தவிர்க்க விவசாயிகளுக்கு அறிவுரை
-
இலவச மொபைல் விண்ணப்பங்கள் வரவேற்பு
-
2025ல் அரசு போக்குவரத்து கழகங்களில் 1,444 விபத்துகள்; 463 பேர் உயிரிழப்பு
-
தலைமை தேர்தல் கமிஷனர் சென்னையில் இன்று ஆலோசனை
-
ராஜ்குமார் கடத்தல் வழக்கு 9 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி