எங்கும் ஊழல்; எதிலும் ஊழல்: பாகிஸ்தான் ஐகோர்ட்டில் 5 ஆண்டாக பணியாற்றிய போலி நீதிபதி நீக்கம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், போலி சான்றிதழ் சமர்ப்பித்து உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர், தாரிக் மெஹ்மூத் ஜஹாங்கிரி. இவர், 2020ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கராச்சி பல்கலைக்கழகத்தில் 1988ல் வழக்கறிஞருக்கு படித்ததாகக் கூறிய ஜஹாங்கிரி, மோசடி வழிகளில் பட்டத்தைப் பெற்றது நீதிமன்ற ஆய்வில் தெரிய வந்தது. தேர்வின்போது மோசடி செய்ததாக பிடிப்பட்ட அவருக்கு 1989ல் பல்கலைக்கழகம், 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதித்தது.
ஆனால் இந்த தடையை மீறி, வேண்டுமென்றே மோசடி செய்து, வேறொரு மாணவரின் சேர்க்கை எண்ணை வைத்து, ஜஹாங்கிரி, 1990 தேர்வில் எழுதியுள்ளார். பல்கலைக்கழகத்தின் அசல் ஆவணங்கள், பதிவாளர் சமர்ப்பித்த ஆதாரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த நீதிமன்றம், அவரது கல்வி சான்றிதழ்கள் மோசடி என கண்டுபிடித்தது.
இதைத்தொடர்ந்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சர்தார் முகமது சர்ப்ராஸ் தலைமையிலான அமர்வு, மெஹ்மூத் ஜஹாங்கிரியின் நியமனம் செல்லாது என்று 116 பக்க தீர்ப்பு வழங்கி, அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜஹாங்கிரியின் பட்டம் ஆரம்பம் முதலே செல்லாது என்றும் அறிவித்தது.
இதனால் 5 ஆண்டுகள் அவர் நீதிமன்றத்தில் அமர்ந்து பல வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தும் சட்டரீதியாக செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் நீதித்துறை வரலாற்றில் மிக அரிதான, மிகுந்த அதிர்ச்சி தரும் சம்பவமாக கருதப்படுகிறது.
All Over World incl India, Numerous Fake-Incompetent-Wasteful Judges Exists And Misuse Justice, Laws& Courts Againsy Nation& Supreme People. Sack& Punish BAR Councils Not Disciplining Advocates incl Judges based on their Quality& Indiscipline Judges have No Primarily Jurisdiction in these Matters
ஆஹா…
ஹெ..ஹெ....இவன் தான் தனது பதவிக்காலத்தில் வழங்கிய தீர்ப்புகள் அனைத்தும் ஷரீஅத் அடிப்படையில் அமைந்தவை- என்று ஒரு பிட் ஐ போட்டு விட்டு ஒதுங்கி வேடிக்கை பார்க்கப் போகிறான்.. அப்போது இருக்கிறது வேடிக்கை.... இவனுக்கு ஆதரவாக போராட்டம் பேரணி குண்டு வெடிப்பு என சகல கல்யாணங்களும் குறைவற நடக்கும்.. அதைப் பிடித்து கொண்டு குறைந்த பட்சம் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது மாநில ஆளுநர் பதவியில் ஒட்டிக் கொள்வான்.. அந்த குல்லா முல்லா நாட்டில் நிகழப்போவது இதுதான்..
இது என்ன பிரமாதம்.
தீவிரவாத துக்ளக் ஆட்சி இப்படித்தான் என்பதற்கு இது மிக பெரிய சாட்சி.
எனக்கென்னமோ மூக்கு முட்ட புளிச்சக்கீரைஏப்பம் விட்ட நீதிபதி கொடுத்த தீர்ப்பில் தான் இம்ரான் கம்பி எண்ணிட்டு இருக்காரு ன்னு மனசு சொல்லுது. சாம்பிராணி கூட்ட அராஜகத்தை உச்சம் தான் பாகிஸ்தானில் நீதிபதியே டுபாக்கூர் ஆளாக அந்த நாட்டின் தலையெழுத்த எழுதியது.. இது இருக்க , நம்மூரு ராயப்பேட்டை ஆட்கள் இந்த செய்திக்கும் வழக்கம்போல அமைதி காப்பார்கள்.
Namma oorulayum thedinaa kidaipaanga
பன்றிஸ்தானின் பிரதமரும் ராணுவ தளபதியும் உண்மையான ஆட்களா போலியா என முதலில் கண்டுபிடிக்க வேண்டும் பாவம் அமெரிக்க கோமாளி அதிபர் இந்த கேடுகெட்ட தீவிரவாத நாயிகளை நம்பி பணம் கொடுத்து உதவி செய்து கொண்டிருக்கிறான்
இதையும் பாடப் புத்தகங்களில் எழுதி தொலைத்து விடப் போகிறார்கள்! இந்த பால் பாகிஸ்தான் போட்டது!
நீதிமன்றத்திற்கு அளவற்ற சுதந்திரம் எவ்வளவு ஆபத்தானது என்று உலகிற்கு உணர்த்திய போலி நீதிபதி. சான்று பணியில் சேர்ந்தவுடன், பணி நிரந்தரம் செய்யும் முன் சரி பார்க்க வேண்டும். இது நிர்வாக பணிகள். இந்திய நீதிமன்றம் அரசு நிர்வாகத்தை நெருங்க விடுவது இல்லை. தணிக்கை இல்லாத ஒரே இடம் நீதிமன்றம். மத்திய அரசு தான் மக்களுக்கு விடை தர வேண்டும்.மேலும்
-
ஜே.இ.இ., முதன்மை தேர்வு தமிழக மாணவர் 2ம் இடம்
-
கோடை சாகுபடியை தவிர்க்க விவசாயிகளுக்கு அறிவுரை
-
இலவச மொபைல் விண்ணப்பங்கள் வரவேற்பு
-
2025ல் அரசு போக்குவரத்து கழகங்களில் 1,444 விபத்துகள்; 463 பேர் உயிரிழப்பு
-
தலைமை தேர்தல் கமிஷனர் சென்னையில் இன்று ஆலோசனை
-
ராஜ்குமார் கடத்தல் வழக்கு 9 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி