சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்; சொல்கிறது ஈரான்
புதுடில்லி: சபாஹார் துறைமுக மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் இந்தியா நிதி ஒதுக்காதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு ஈரானின் சபாஹார் துறைமுகத்தை பயன்படுத்துவதற்காக இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தத்துறைமுகத்தில் இருக்கும் இரு முனையங்களில் ஒன்றான ஷாஹித் பெஹெஷ்டி முனையத்தில் கன்டெய்னர்கள் மற்றும் சரக்குகளை கையாள, இந்தியா குறுகிய கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டியிருந்தது.
கடந்த 2024ம் ஆண்டு இந்தத்துறைமுகத்தை இந்தியா, 10 ஆண்டுகளுக்கு கையாள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து, சபாஹார் துறைமுகத்தை பராமரிப்பதற்காக பட்ஜெட்டில் வழக்கமாக நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இருப்பினும், சபாஹார் துறைமுகத்தின் முக்கியத்துவம் கருதி, சில சலுகைகளை அமெரிக்கா வழங்கியிருந்தது. ஆனால், இந்தத்துறைமுகத்தை இந்தியா பயன்படுத்துவதற்கு அளிக்கப்பட்ட விலக்கை அதிபர் டிரம்ப் வாபஸ் பெற்றார். இதனால், சபாஹார் துறைமுகத்தை பயன்படுத்துவதில் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, பட்ஜெட்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், சபாஹார் துறைமுக மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் இந்தியா நிதி ஒதுக்காதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது; சபாஹார் துறைமுக பராமரிப்பிற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாதது ஈரானுக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கும் பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பிரதமர் மோடி கூறியதைப் போல, ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளை இந்தியாவுடன் இணைக்க முக்கிய பங்காற்றுவதால், சபாஹார் துறைமுகத்தை 'கோல்டன் கேட்' என்று கூறலாம்.
இது ஒரு மிக முக்கியமான ராஜதந்திர துறைமுகமாகும். இந்தத் துறைமுகம் முழுமையாக மேம்படுத்தப்பட்டால், இந்தியா, ஈரான், மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மிகச்சிறந்த போக்குவரத்துப் பாதையாக இது அமையும், இவ்வாறு அவர் கூறினார்.
பணிந்துவிட்டது வருத்தமே.
இப்போ அமெரிக்கா ஈரான் நாடு பிரச்சினை போர் என்கிற கட்டத்துக்கு சென்று விட்டது. இந்தியா பணம் கொடுத்து உதவப்போய் போர் சமயத்தில் மொத்தமா குண்டு போட்டால் எல்லா முதலீடும் வீணாகிவிடும். சற்று நிதானித்து இந்தியா செயலாற்றும்.
ட்ரம்ப் கண்டால் பயம்..,
தீவிரவாதிகளுக்கு வயித்தாலே போகும்.
பெரியண்ணன் பேச்சை மீற முடியாதே!
இருநூறு கொடுத்தால் போதும்
2017 18 ஆம் ஆண்டிலிருந்து சாபஹார் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்து வருகிறது. இரானுடன் இணைந்து செயல்படுத்தப் படும் இந்தத் திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது இதுவே முதல்முறையாகும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில், சாபஹார் துறைமுகத்திற்காக 400 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இரானின் ஸ்திரத்தன்மை பலவீனமடைந்துள்ளது. மேலும் முக்கியமான காரணம் ஈரான் மற்றும் இஸ்ரேல் அமெரிக்கா இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. போனமுறை இஸ்ரேல் ஈரானை தாக்கும் போதே நமக்காகவே சபாஹார் துறைமுகத்தை தாக்கவில்லை! அதனால்தான் சாபஹார் திட்டத்தில் இந்தியா தொடர்ந்து முதலீடு செய்யாததற்கான முக்கிய காரணம்.
ஈரான் உதவும் ஹமாஸ் தீவிரவாதிகள் உதவியுடன், காஷ்மீரில் ஹிந்துக்களின் அடையாளத்தை பார்த்து சுட்டு கொன்றது நினைவுக்கு வருகிறது. ஒரு தீவிரவாத கூட்டத்திற்கு எப்படி உதவி செய்ய முடியும்? அழிவு தான் மிச்சம்.
this known only in date of budget in 2026?!
can you please to Iran and solve this problem...
ஒரு பொய்ய திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடாது...
டிரம்ப் குரல் கொடுத்ததும் பயந்து விட்டார்
ஞான சூனியம்...இருநூறுக்கு எப்படி எல்லாம் முட்டு குடுக்க வேண்டியுள்ளது...
காங்கிரஸ் ஷோடங்கர் சொன்னதும் ஸ்டாலின் பயந்தது போலவா
விவேக் சார் ஷோடங்கர் எண்ண சொன்னார் ஸ்டாலின் பயந்தார் என்று சொல்லுங்களேன் பார்க்கலாம். நாங்கள் வேண்டுமானால் ராமை பார்த்து போலி 56 எப்படியெல்லாம் பம்முகிறதுன்னு சொல்கிறோம்.
அப்போ காங்கிரஸ் கழட்டிட்டு போக போறது உனக்கு தெரியாதா நிசரு...ரொம்ப வெகுலியா இருக்கே
நிசார்..திமுக ஷாக்...
உபயோகம் ஆகும் என்றால் நிதி ஒதுக்குவார்
நீயும் இனிமேல் டாஸ்மாக் பாட்டில் சேர்த்து வைமேலும்
-
தேர்தல் நேரத்தில்தான் ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஞாபகத்துக்கு வரும்: இபிஎஸ்
-
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: ஜிம்பாப்வே அணி திணறல் ஆட்டம்
-
அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல்; முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு சிக்கல்
-
48 மணி நேரத்தில் விமான டிக்கெட் ரத்து செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது!
-
ஏஐ, சைபர் பாதுகாப்பு முதல் வர்த்தகம் வரை: இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்
-
எளியவர் இதயங்களை இன்னும் ஆள்கிறார் எம்ஜிஆர்: திமுகவினர் 'ஷாக்' ஆகும் வீடியோ வைரல்!