அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் ஊழல்; முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு சிக்கல்
நமது நிருபர்
ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம், விதிகளை மீறி 3500 கோடி ரூபாய் முதலீடு செய்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏர்செல் நிறுவனம் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது.
இந்த விவகாரத்தில், அந்நிய முதலீட்டு விதிகளுக்கு புறம்பாக நிதியமைச்சர் சிதம்பரம் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதற்காக, சிதம்பரத்தின் மகன்கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடான வகையில் பயன் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது.முன்னாள் நிதி அமைச்சரான சிதம்பரம் மீது இந்த வழக்கை தொடர்வதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.இது மட்டுமின்றி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் ஊழலில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் 1.16 கோடி ரூபாய் முறைகேடாக பெற்றதை கண்டறியப்பட்டுள்ளது.
இன்னொரு ஊழல் :
இதைப் போலவே இன்னொரு ஊழல் வழக்கும் சிதம்பரம் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு முறைகேடாக வெளிநாட்டு முதலீடு பெற்றது தொடர்பான இந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் 65.88 கோடி ரூபாய் முறைகேடாக பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கிலும், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் மீது வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதி கடிதங்களை, அமலாக்கத்துறை, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த விவகாரம் சிதம்பரத்திற்கும், திமுக கூட்டணிக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இதையே சொல்லிக்கொண்டு இருப்பீர்கள்.. தண்டனை அல்லது விடுதலை இரண்டில் ஒன்றை செய்யுங்கள்.. நீதித்துறை என்ற ஒன்று எதற்காக இருக்கிறது.. ஒவ்வொரு வழக்கிற்கும் கால நிர்ணயம் செய்ய வேண்டும்..
ஆமை நகர்வது கூட வேகமாக தெரியும். அரசியல்வாதிகளின் கேஸ் எத்தனை வருடங்கள் ஆனாலும் நகரவே நகராது.. ஊழலில் மட்டும் கூட்டு களவாணிகள்.
அந்த ƈG' scam enna aachu??
பட்டை நாமம் தான் இல்லையா? பாவம் பொது ஜனம்!!
நீதித்துறையைப் பற்றி பேசினா அனைவருக்கும் கோவம் வருகிறது. எட்டாம் வகுப்பு புத்தகத்தில் எழுதி விட்டனர், மன்னிப்பும் கேட்டு விட்டனர். மக்கள் மனதில் எழும் சந்தேகத்தினை அணை போடுவது எப்போது ? சிதம்பரம் ஆட்சியில் இருந்து இறங்கி பனிரெண்டு வருடங்கள் கழிந்து விட்டது. என்ன நடந்தது ? காங்கிரஸ் ஆட்சியில் அவ்வளவு ஊழல்கள் வெளிவந்தன. அனைத்து துறைகளிலும் ஊழல், என்னவாயிற்று ? யாருக்கு யார் காவடி தூக்கி யாரையும் சிறைக்குச் செல்லாமல் காப்பாற்றுகிறார்கள் ? தண்டிக்கப்பட்ட திமுக அமைச்சர்கள் என்னவானார்கள் ? ஏன் சிறை செல்லவில்லை ? காங்கிரஸ் மற்றும் பல அரசியல் தலைவர்கள் எவ்வளவு காலம் ஜாமீநிலேயே இருப்பார்கள் ? லாலு யாதவு எங்கே ? இந்துக்களின் விவகாரங்களில் தலையிட்டு முழக்கமிடும் நீதித்துறை இந்த ஊழல் பேர்வழிகள் விஷயத்தில் மியாவ் என்று இருப்பது ஏன் ? எரிந்து போன பண மூட்டையை வைத்திருத்த அந்த நீதிபதி என்னவானார் ?
சும்மா பூச்சாண்டி காட்ட வேண்டாம். இரண்டு குற்றவாளிகளும் MP க்கள் . தீர்ப்பு வரும் போது யாரெல்லாம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. உலகத்திலேயே மிக மோசமானது இந்தியாவின் நீதி துறை.
இதே போல ஆயிரம் விஷயம் பார்த்துவிட்டோம் . எந்த நடவடிக்கையும் இருக்காது .
ஊழல் காங்கிரஸிடமிருந்து, புனிதமான திமுக விலகி இருப்பதே நல்லது.
தேர்தல் வந்தால் இவர்கள் வெளியே வந்து அற்புதமான கருத்துக்களை பாமர மக்களுக்கு பாடம் எடுப்பார்கள். தமிழ்நாட்டிற்கு எது நல்லதோ அது நடந்தால் சரி
சிதம்பரத்தின் பேராண்டி காலத்தில் கூட இந்த வழக்கு முடியாது.
அட போங்கய்யா நீங்களும் உங்கள் ஊழல் கண்டுபிடிப்புக்களும். கேற்கிறேன், இதுவரை இந்த ஆளு மீது உள்ள ஏதாவது ஒரு ஊழல் வழக்கு முடிவுபெற்று, இவருக்கு ஏதாவது தண்டனை கிடைத்ததா...? இல்லைதானே... பிறகு எதற்கு மேலும் மேலும் ஊழல் வழக்குகள்?