ராஜ்தீப் சர்தேசாய் அறிமுகம்

ராஜ்தீப் சர்தேசாய்

மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், 'டிவி' செய்தி தொகுப்பாளர்

வயது, 60. அச்சு மற்றும் 'டிவி' ஊடக துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். 'இந்தியா டுடே' குழுமத்தில் கன்சல்டிங் எடிட்டர், முதன்மை செய்தி தொகுப்பாளர்.

முன்பு: ஐ.பி.என்., 18 குழுமத்தின் நிறுவனர், என்.டி.டி.வி., குழும சேனல்களின் நிர்வாக ஆசிரியர், 'டைம்ஸ் ஆப் இந்தியா' மும்பை பதிப்பு ஆசிரியர்.

எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியாவின் தலைவர். மும்பை சேவியர் கல்லுாரியில் முதுகலை, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலையில் சட்டம். பத்திரிகை துறையில் ஆற்றிய பணிக்காக 2008ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது; 50-க்கும் மேற்பட்ட பல விருதுகள்.

'இந்தியன் டெலிவிஷன் அகாடமி'யின், 'சிறந்த செய்தி தொகுப்பாளர்' விருது, பத்து முறை. 2020ல் வாழ்நாள் சாதனையாளர் விருது.

எழுதிய புத்தகங்கள்: 'தி எலெக் ஷன் தட் சர்ப்ரைஸ்டு இந்தியா - 2024', 'ஹவ் மோடி வான் இந்தியா', 'தி எலெக்ஷன் தட் சேஞ்ச்ட் இந்தியா', 'டெமாக்ரஸீஸ் லெ வன்'.

Advertisement