இந்தியா வந்தார் கனடா பிரதமர் மார்க் கார்னி
மும்பை: கனடா பிரதமர் மார்க் கார்னி தமது இந்திய பயணத்தின் முக்கிய அம்சமாக மும்பை வந்து சேர்ந்தார்.
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வந்துள்ளார். 4 நாள் அரசு முறைப்பயணமாக அவரது பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியா வந்துள்ள அவர், தமது பயணத்தின் முக்கிய அம்சமாக மும்பை வந்து சேர்ந்துள்ளார். பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.
மார்ச் 1ம் தேதி கார்னி புதுடில்லி செல்கிறார். பின்னர் மார்ச் 2ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். வர்த்தகம், எரிசக்தி, கனிமங்கள், விவசாயம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை நல்குவது மற்றும் பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் பிரதிநிதிகளும் இடம்பெறுகின்றனர்.
அதன் பின்னர், பிரதமர் மோடியும், கார்னியும் இந்திய-கனடா நாடுகளின் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஸ்வாகதம் திரு. மார்க் கார்னி பாரதம் உங்களை வரவேற்கிறது.
மோடி ஆட்சியில்தான் உலகத்தில் உள்ள அதிக நாட்டு தலைவர்கள் இந்தியா வந்தார்கள். அதேபோன்று மோடிஜியும் அதிக உலக நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறார். காரணம் - இந்தியாவின் வளர்ச்சி பலவேறு துறைகளில். எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளாது. விட்டுத்தள்ளுங்கள் அவர்களை. அவர்கள் தேசதுரோகிகள்.
Welcome to India Sir!!மேலும்
-
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி
-
நல்லகண்ணு என்ற மாமனிதர்!
-
ஈரான் பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்; மாணவர்கள் 40 பேர் பலி
-
டெஹ்ரானில் தவிக்கும் இந்திய மாணவர்கள்; உதவி கோரி வீடியோ வெளியிட்ட மாணவி
-
ஈரான் தாக்குதல் எதிரொலி: ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் ரத்து
-
டெஹ்ரானில் குண்டுமழை பொழியும் அமெரிக்கா, இஸ்ரேல்; எங்கே இருக்கிறார் கமேனி?