டெஹ்ரானில் தவிக்கும் இந்திய மாணவர்கள்; உதவி கோரி வீடியோ வெளியிட்ட மாணவி
ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆஸ்திரேலியா ஆதரவு
துபாய்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் இன்று (பிப்ரவரி 28) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில், ஈரானின் அணுசக்தி தளங்கள், ஏவுகணை மையங்கள் மற்றும் கடற்படை நிலைகளை இலக்கு வைத்து இந்த "பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை" தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை ஆதரித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்கவும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலைச் சமாளிக்கவும் அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறோம்.
ஈரான் பல தசாப்தங்களாக ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்கள் மூலம் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்கி வருகிறது.
மேலும், அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஈரானிய மக்களுக்குத் துணை நிற்கிறோம்.
ஈரான் பதிலுக்கு இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியர்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் ஆங்கஸ் டெய்லரும் இந்தத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, ஈரானிய அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இவ்வாறு ஆண்டனி ஆல்பனீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல்களுக்கு மத்தியில் டெஹ்ரானில் இந்திய மாணவர்கள் சிக்கியுள்ள விவரம் வெளியாகி உள்ளது.
அணுசக்தி ஆயுதங்களை வைத்துள்ளது என்பது ஈரான் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு. மேலும் அணு ஆயுத திட்டத்தை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் வலியுறுத்தலை ஈரான் நிராகரிக்க, அந்நாடு மீது அமெரிக்கா நேரடி தாக்குதல்களை தொடங்கி உள்ளது. அமெரிக்காவுடன் இஸ்ரேலும் கைகோர்க்க, ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் எங்கும் குண்டுமழை பொழிந்து வருகிறது.
இருநாடுகளின் இந்த அதிரடி தாக்குதல்கள் எதிரொலியாக மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பதற்றம் உருவாகி உள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் பல்வேறு நாடுகளின் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு வான்வெளி பாதைகளும் உடனடியாக மூடப்பட்டு உள்ளன.
கமேனியை குறி வைத்து அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கும் அதே தருணத்தில் அங்குள்ள இந்திய மாணவர்களின் நிலை இப்போது எப்படி உள்ளது என்ற கேள்விகளும் ஒலிக்க ஆரம்பித்து உள்ளன.
@twitter@ https://x.com/PTI_News/status/2027723772816707736?s=20twitter
போர் சூழலுக்கு மத்தியில் தற்போது டெஹ்ரானில் பயிலும் இந்திய மாணவி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்திய அரசின் உதவியை கோரி உள்ளார்.
38 வினாடிகளே நீடிக்கும் அந்த வீடியோவில் அவர் கூறி உள்ளதாவது;
நான் ஒரு இந்திய மாணவி. டெஹ்ரானில் படித்து வருகிறேன். இங்கு தற்போது காணப்படும் சூழல் நிச்சயமற்றதாக இருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது உண்மையிலேயே தெரியாது.
வான்வழித் தாக்குதல்கள் எங்களுக்கு மிகுந்த பயத்தை உருவாக்கி இருக்கிறது. எவ்வளவு விரைவாக எங்களை இங்கிருந்து வெளியேற்றி அழைத்துச் செல்ல முடியுமோ, அவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுங்கள்.
நிலைமை கவலைக்குரியதாக மாறும் வரையில் காத்திருக்க வேண்டாம். எங்களுக்கு உதவுங்கள்.
இவ்வாறு அந்த வீடியோவில் மாணவி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளதோடு, இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்துள்ளன.
ஜனவரி மாதம் மத்திய அரசு இரானில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற சொல்லிவிட்டது. பல மாணவர்கள் இரானில் நிலைமை அபாயம் இல்லை என்று விடியௌ போட்டு கொண்டு ஆங்கூ உட்கிருந்திருந்தடர். இப்ப போர் ஆறம்பித்த பிறகு ஏன் கூக்குரல் இட வேன்டம்
பஸ் சேவை ரெடி.
மத்திய அரசு சொல்வதற்கு முன் பத்து நாளைக்கு முன்பே நான் எச்சரிக்கை செய்தேன் அப்போது யாரும் கேட்டது போல் தெரியவில்லை இப்ப நல்லா அனுபவீங்க...
இந்த மாணவர்கள் என்ன படிப்பு படிக்க ஈரான் சென்றார்கள். ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் , லெபனான் போன்ற நாடுகளில் எப்போதும் கலவரம் வெடிக்கும் நிலை என்று தெரிந்தும் ஏன் செல்ல வேண்டும். நம் நாட்டில் இல்லாத என்ன படிப்பு அங்கு உள்ளது.
இதில் அமைதி மார்க்கத்து மாணவர்கள் தான் அதிகம் இருப்பார்கள். இவர் தமிழக முதல்வருக்கு வீடியோ அனுப்பினால்
விடியல் பேருந்து அனுப்பி திருப்பி அழைத்து வந்து விடுவார்.
இவர்கள் இத்தனை நாட்கள் மத்திய அரசு மீண்டும் மீண்டும் சொல்லியதே வெளியேறுங்கள் என்று அப்போது என்ன செய்து கொண்டு இருந்தார்கள். அதெல்லாம் இருக்கட்டும். ஈரானில் சென்று என்ன படிக்கிறார்கள். அப்போது வர மனம் இல்லாதவர்கள் இப்போதும் வர வேண்டாம். . ஒரு பிஜேபி தலைவர் 1 வாரத்திற்கு முன்பு சொல்லி இருந்தார். இந்திய நாட்டு பெண்கள் ஈரானில் போர் வெடித்தால் அங்கு இருந்து இப்படி ஒரு வீடியோ வெளிவரும் என்றும். அவர்கள் ஒன்று மலையாள பெண்களோ அல்லது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இருந்தோ வரும். இவர்களுக்கு வேண்டி உங்களைப் போன்ற மீடியாக்கள் துணை நின்று மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் என்று அது நடந்தது விட்டது. இவர்கள் தாயகம் திரும்ப வேண்டாம். 140 கோடி மக்கள் தொகை உண்டு.அது போதும். நாடு நன்றாகும்.
இந்தியா மாணவர்கள் மற்றும் அங்கு வேலை பார்ப்பவர்களை ஈரானிலிருந்து காலி செய்ய சொல்லி மத்திய அரசு எச்சரிக்கைகள் பல வெளியிட்டு விட்டது. இந்த அமைதி வழி மாணவர்கள் இந்திய அரசின் அறிக்கைகளை மதிக்காமல் அரசின் இலவச விமானத்திற்கு காத்திருக்கிறார்கள். உயிரை இழந்தாலும், இது அவர்களின் தவறு.
தமிழக மொதலமச்சருக்கு கிட்ட கேளுங்க. உக்ரைனுக்கு பஸ் அனுப்பி காப்பாத்துன மாதிரி காப்பாத்துவாரு.
இந்திய மாணவி???ஈரானில் தவிக்கும்???இவர்கள் இந்தியர்கள்???இஸ்லாமியர்கள் அல்லவே அல்ல அப்படித்தானே???
“என்ன வளம் இல்லை இந்த தாய்நாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்... ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில்... உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்”... என்ற வரிகள்தான் இவர்களுக்கு பதில்... இருக்குறதை விட்டுவிட்டு... பறக்குறதுக்கு ஆசைபட்டால்... இந்த கதிதான்...? சொந்தபந்தங்கள், உற்றார் உறவினர், நண்பர்கள்... இவ்வளவு ஏன், எதிரியாககூட இருந்தாலும் அவன் என் தாய்நாட்டில் உள்ள எதிரிதான்... இவர்களுடன் கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு... உயிர் பயமின்றி நிம்மதியாக, அமைதியாக வாழ்வதை விரும்பாமல்... ஆடம்பரம், படாடோபம் இவற்றுக்காக பேராசை பிடித்து அயல்நாடுகளுக்குச் சென்றால் இந்த கதிதான்... இது எல்லாருக்குமே பொருந்தும்...? ஃபாரின்ல படிச்சதான் படிப்பு... அப்படீங்கற மனநிலையில் இருந்து இந்தியர்கள் மாறும் வரை இதுபோன்ற அச்சங்கள், பயங்கள், அதற்குமேல் மரணங்கள் தொடரத்தான் செய்யும்... “பேராசை பெருநஷ்டம்”
அவர்கள் அங்கே சென்றது பாடம் படிக்க
இந்தியாவில் இல்லாத அப்படி என்ன படிப்பு அங்கு இருக்கு?
வாடகை வாயர்கள், திரு குரு மா, அப்புறம் இத்யாதி இத்யாதிகள் ஒரு கண்டன ஆர்பாட்டம் நடத்தினாலே அமரிக்கா, இஸ்ரேல் பயந்து ஓடிவிடும். விடியல் பஸ் சர்வீஸ் அனைத்து மாணவர்களையும் மீட்டு விடுவார். ஸ்டிக்கர் ரெடி.