பூசாரிகள் நலனுக்காக 11 அறிவிப்புகள்; வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னை மயிலாப்பூரில் நடந்த மாநாட்டில், பூசாரிகள் நலனுக்காக 11 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:
* ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அனைத்து பூசாரிகளுக்கும் புத்தாடை வழங்கப்படும்.


* கிராம கோவில் பூசாரிகளுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு 75 ஆயிரத்தில் இருந்து ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்படும்.
* உயிரிழந்த பூசாரிகளின் ஈம சடங்கிற்கு நிதியுதவி ரூ.10,000 வழங்கப்படும்.
* பெரிய கோவில்களில் ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு புத்துயிர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
* பூசாரிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் திருமண நிதியுதவி மே லும் ரூ.1,000 உயர்த்தப்படும்
* பூசாரிகளின் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்வி நிதியுதவி மேலும் ரூ.1,000 உயர்த்தப்படும்
* பூசாரிகளின் குழந்தைகளுக்கு முதுநிலை மற்றும் இளநிலை படிப்புகளுக்கு ஆண்டுக்கு மேலும் ரூ.2,000 உயர்த்தப்படும்.
* பூசாரிகளின் குழந்தைகளுக்கு தொழில்சார்ந்த முதுநிலை மற்றும் இளநிலை நிதியுதவி ஆண்டுக்கு மேலும் ரூ.2,000 உயர்த்தப்படும்.
* பூசாரிகளின் குழந்தைகள் தொழில் பயிற்சி நிலையத்தில் பயில வழங்கப்படும் நிதியுதவி ஆண்டுக்கு மேலும் ரூ.1,000 உயர்த்தப்படும்.
* பூசாரிகள் மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கு வழங்கப்படும் நிதியுதவி 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
எல்லோருக்கும் எல்லாம்
மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் அரசின் எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டிற்கு சான்றாக இவ்விழா அமைந்துள்ளது. இக்கோட்பாடு வெறும் வாய் வார்த்தை அல்ல. நாம் சொல்வதை செயலில் நிரூபிப்பதற்கான அடையாளமே இம்மாநாடு. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படலாம். உண்மையான ஆன்மிகப் பற்றாளர்களும் இறையன்பர்களும் விரும்பக்கூடிய அரசுதான் திராவிட மாடல் அரசு.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திருமூலர் சொன்ன வழியில் திமுக அரசு செயல்படுகிறது. பூசாரிகள் வாழ்விலும் விடியலை ஏற்படுத்தவே திமுக அரசு செயல்பட்டு வருகிறது. நான் அதிகம் பங்கேற்றது அறநிலையத் துறை நிகழ்ச்சிகளில்தான். அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக யார் இருந்தார் என்று கூட மக்கள் நினைவில் இருக்காது.
சமத்துவம்
இப்போது அறநிலையத்துறை அமைச்சர் யார் என்று மக்களிடம் கேட்டால், பளிச்சென்று சேகர்பாபுவின் பெயரைச் சொல்வார்கள். கோவில் திருப்பணிகளை வேகமாக அமைச்சர் சேகர்பாபு செயல்படுத்துகிறார். சமரசமும், சமத்துவமும்தான் ஆன்மிகப் பாதையாக இருக்க முடியும். சமத்துவத்தைப் போற்றும் அனைவரையும் நாம் போற்றுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கேடுகெட்ட திராவிஷ சதியால் சிக்கி சீரழிந்து வரும் பாவப்பட்ட ஜென்மங்கள் இப்போது வக்கணையா பேசி பலி வாங்கும் வஞ்சகனை நாடுதடா....
கிராம நகர கோவில் மாதம் 4000 ரூபாய் சம்பளம். ஒரு நாளைக்கு ரூ 133. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை சம்பளத்தை விட குறைவு. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
இதில் ஒரு அறிவிப்பு கூட உறுபடியானதாக இல்லை . உதாரணத்துக்கு கண்ணாடி திராவிட கண்ணாடிக்கடையில் தான் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கமுடியும் . அத்தனையும் வெத்து அறிவிப்புகள் .
இவர் சொல்வதையெல்லாம் நம்பாதீர் . இந்த அறிவிப்புகளில் சொல்லப்பட்டிருக்கும் ஏதுமே இப்போதைய பொருளாரத பணவீக்கத்துக்கு ஏற்புடையது அல்ல .
இப்போது அற நிலையத்துறை அமைச்சர் யார் என்று கேட்டால் சேகர் பாபு என எல்லோரும் சொல்வார்கள் , முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்றே தெரியாது முதல்வர் சொன்னது உண்மைத்தான். அ.தி.மு.க ஆட்சியின் அறநிலையத்துறை அமைச்சர் அவர் துறை சார்ந்த பணிகளை மட்டுமே செய்து கொண்டிருந்தார். ஆனால் சேகர் பாபு தன் துறை சார்ந்த பணிகளை விட்டு, விட்டு மாண்புமிகு முதல்வரின் நிகழ்ச்சிகளில் குத்தாட்டம் போட ஆட்களை செட் செய்து அவர்களை ஆட வைத்தது மட்டுமல்லாமல் தானும் கைதட்டி ஆரவாரம் செய்து முதல்வரின் மனம் கோணாமல் பார்த்துக் கொண்டார். அப்புறம் என்ன முதல்வர் இவரைப் பாராட்டத்தானே செய்வார்? நடு நிலைமையோடு மனதில் கை வைத்து எண்ணிப் பாருங்கள். மாண்புமிகு முதல்வர் அவர்கள் அமைச்சர்களில் உதயநிதியையும், சேகர்பாபுவையும் தவிர வேறு எந்த அமைச்சரையாவது தனிப்பட்ட முறையில் இதுவரை பாராட்டிப் பேசியது உண்டா? அப்படி என்ன மகத்தான சாதனை செய்து விட்டார் சேகர் பாபு?
தேர்தல் நெருக்கத்தில் திடீரென்று பூஜாரிகள் ஞாபகம் வந்துவிட்டது . கோவில் பணத்தை எடுத்து அவர்களுக்கு கொடுத்து கட்சிக்கும் தனக்கும் விளம்பரம் தேடிக்கொண்டார் .
ஓட்டு வேணும்னா அலகு குத்தி பழனிக்கே பால் காவடி எடுக்கும் கூட்டம் தீமுகா என்று, அது 100 சதவிகிதம் உண்மை.
பெரியாரின் புத்தகம் படியுங்கள் - புரியும்
உங்களுக்கு அங்க என்ன வேலை? அவர்கள் கூறும் மந்திரங்களை கேட்டாலே உடல் கூசுகிறது என்றீர்களே.
இந்துக்களின் கோவில் காணிக்கை பணத்தை எடுத்து பூசாரிகளுக்கு கொடுத்து ஊரை ஏமாற்றுகிறாயா பதவியிலிருந்து விரட்டியடிப்போம்மேலும்
-
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி
-
நல்லகண்ணு என்ற மாமனிதர்!
-
ஈரான் பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்; மாணவர்கள் 40 பேர் பலி
-
டெஹ்ரானில் தவிக்கும் இந்திய மாணவர்கள்; உதவி கோரி வீடியோ வெளியிட்ட மாணவி
-
ஈரான் தாக்குதல் எதிரொலி: ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் ரத்து
-
டெஹ்ரானில் குண்டுமழை பொழியும் அமெரிக்கா, இஸ்ரேல்; எங்கே இருக்கிறார் கமேனி?