தொடங்கியது போர்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல்
டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர், வான்வழித் தாக்குதலை முழு வீச்சில் தொடங்கியுள்ளனர். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வுக்கு தீர்வு கோரியும், ஈரானிய மதகுரு கமேனி ஆட்சியை எதிர்த்தும், அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். அந்நாட்டு அரசு, போராட்டக்காரர்கள் மீது, ராணுவத்தினரை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர்.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை கைவிட வேண்டும், இல்லையெனில், அமெரிக்கப்படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வந்தார். மேலும், 'எந்தக்காலத்திலும் நாங்கள் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம்' என்று ஈரான் உத்தரவாதம் அளித்து ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.



இந்நிலையில் இன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் , ஈரான் மீது தாக்குதலை தொடங்கினர். தலைநகர் டெஹ்ரான் மற்றும் ஜோம்ஹாரி பகுதிகளில் அடுத்தடுத்து பல ஏவுகணைகள், குண்டுகள் வந்து விழுந்தன. உயர்ந்த கட்டடங்கள் பல தீப்பற்றி எரிவதாக, சர்வதேச செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் ஏவுகணை தாக்குதல் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் பல இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதால் ஈரான் முழுவதும் அபாய ஒலி எழுப்பப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அனைவரும் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் உறுதி
ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் காட்ஸ் உறுதி செய்தார். அமெரிக்க ராணுவமும், தாக்குதல் நடத்தியதை உறுதி செய்துள்ளது. ஈரான் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால், இஸ்ரேல் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஜூன் மாதம், அமெரிக்க விமானப்படை விமானங்கள், ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது குண்டு வீசி தாக்கியது குறிப்பிடத்தக்கது.
தயார் நிலையில் அமெரிக்க படைகள்
ஈரான் மீது தாக்குதலுக்கு முன்னோட்டமாக, அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஜெரால்டு போர்டு, வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன், அமீரகம், இஸ்ரேல், சவுதி அரேபியா, ஜோர்டான், கிரீஸ் நாடுகளில், அமெரிக்க போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஓமன் வளைகுடா, அரேபிய வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை, அரபிக் கடல் பிராந்தியங்களில் ஏராளமான அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் பட்சத்திலும், அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்ய மறுக்கும் பட்சத்திலும், இந்த படைகளை அமெரிக்கா முழு வீச்சில் களம் இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் மாளிகை மீது தாக்குதல்
ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானில் அதிபர் மாளிகை, மதகுரு கமேனியின் மாளிகை மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கமேனி ரகசிய இடத்தில் வசிப்பதால் அவருக்கு பாதிப்பு எதுவுமில்லை. அதிபர் மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதலில், அதிபருக்கு எதுவும் பாதிப்பில்லை என்று ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாசகர் கருத்து (20)
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
28 பிப்,2026 - 16:32 Report Abuse
பாலஸ்தீன், ஹமாஸ், காசா என்று
கூச்சல் போட்ட அமைதி மார்க்கத்தினர், அவர்கள் ஆதரவாளர்கள் ஏன் முடங்கி இருக்கின்றனர். ஈரான் முஸ்லிம்கள் இவர்கள் பார்வையில் இஸ்லாமியர்கள் இல்லையா ?
ஷியா, சன்னி வேறுபாடோ .
அடுத்து ஆப்கான் இஸ்லாமியர்கள்
பாகிஸ்தான் இசுலாமிய அரசு மீது
போர். இரு தரப்பிலும் இஸ்லாமியர்கள் கொல்லப் படுகின்றனர். நம்ம ஊரு
திருமா, சீமான், இதயத்துல்லா , காசுவாங்கி கம்யூனிஸ்ட்கள், சிறுபான்மை பாதுகாவலர் ஆகிய
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்,
உளறல் நாயகன் க மல ஹாசன், அருணன், மூத்த பத்திரிக்கையாளர்கள்
வாய் மூடி மௌனமாய் இருப்பதன் காரணம் என்ன ? இன்னமும் "விருந்து" வர வில்லையா? 0
0
Reply
S.Sivarajan - fujairah,இந்தியா
28 பிப்,2026 - 15:54 Report Abuse
ஒப்பந்தத்துல கையெழுத்துப்போட்டுட்டு கட்டிப்பிடிச்சு சிரிச்சி சாமர்த்தியமா போஸ் கொடுக்கிறத விட்டுட்டு இதெல்லாம் ஈரானுக்கு தேவையா ? 0
0
Reply
Vasan - ,இந்தியா
28 பிப்,2026 - 15:44 Report Abuse
வாழ்த்துக்கள்.
ரஷ்யா உக்ரைன் போர் போல், இந்த போரும் 5 ஆண்டுகளுக்கு மேல் நடந்து, மூன்றாம் உலக போரில் நல்ல படியாக முடிய வேண்டும். 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
28 பிப்,2026 - 15:00 Report Abuse
ஐயகோ சிறுபான்மை மீது குண்டு போடுறாங்களே? அடேய் அந்த நாட்டில் அவங்க தான் .அதெல்லாம்.தெரியாது.. 0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
28 பிப்,2026 - 14:46 Report Abuse
0
0
Reply
Kannan Chandran - Manama,இந்தியா
28 பிப்,2026 - 14:42 Report Abuse
ஈரான் இன்று காலை 11 மணியளவில் பஹ்ரைன் மேல பத்துக்கும் மேற்பட்ட ஏவுகணையை ஏவி உள்ளனர். 0
0
Reply
Skywalker - ,
28 பிப்,2026 - 14:39 Report Abuse
Kameni down down! Usa and Israel will soon soon remove the tyrant and establish peace and democracy in Iran and destroy the jihadists 0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
28 பிப்,2026 - 14:33 Report Abuse
வெறும் புகையை காட்டும் போட்டோஸ் மட்டுமே வருது, வழக்கமா கட்டிட இடிபாடுகளுக்குள் ஆட்கள் நிற்கும் படங்கள் தானே போடுவீங்க 0
0
Reply
theruvasagan - ,
28 பிப்,2026 - 14:00 Report Abuse
சிறுபான்மை இனக் காவலர்களே. ஓடி வாங்க. ஈரான்ல உங்க ஆளுங்களுக்கு ஆபத்து. நீங்க எப்பவும் சொல்லுவீங்களே. நாங்க சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கேடயமாக நிற்போம் என்று. ஓடுங்க ஈரானுக்கு.
அங்க தாக்க வரும் இஸ்ரேல் அமெரிக்காகாரன் பீரங்கிகளுக்கு முன்னாடி கேடயமாக நிற்க இப்ப நல்ல சான்ஸ். இங்கேயும் சிறுபான்மை ஓட்டை அள்ளலாம். 0
0
Kumar Kumzi - ,இந்தியா
28 பிப்,2026 - 15:09Report Abuse
ஹாஹாஹா சூப்பர் 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
28 பிப்,2026 - 14:00 Report Abuse
ஈரான் உலக அளவு அமைதி வழி தீவிரவாதத்திற்கு பண மற்றும் ஆயுத உதவி செய்கிறது. அமெரிக்காவில் இரண்டு மாநிலங்களில் மர்ம வழி அமைதி நபர்கள் கவர்னர்களாக வந்து உள்ளனர்.
ஈரான், துருக்கி போன்ற நாடுகள் அமெரிக்காவில் மத மாற்றம் மூலம் மிக பெரிய பிரச்சனைகளை, கலவரங்களை மறைமுகமாக செய்து வருகின்றனர்.
ஈரான் அணு ஆயுதம் பெற்றால் அது அங்கு உள்ள முஸ்லீம் நாடுகளுக்கு மட்டும் இல்லாமல், அமெரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு மிக பெரிய அழிவாக இருக்கும்.
இந்தியாவிலும் ஈரான் மறைமுகமாக, ஹமாஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் மூலம் தேச விரோத செயல்களுக்கு பண உதவி செய்கிறது. ஈரானுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா துருக்கியை பதம் பார்க்கும். 0
0
Reply
மேலும் 9 கருத்துக்கள்...
மேலும்
-
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி
-
நல்லகண்ணு என்ற மாமனிதர்!
-
ஈரான் பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்; மாணவர்கள் 40 பேர் பலி
-
டெஹ்ரானில் தவிக்கும் இந்திய மாணவர்கள்; உதவி கோரி வீடியோ வெளியிட்ட மாணவி
-
ஈரான் தாக்குதல் எதிரொலி: ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் ரத்து
-
டெஹ்ரானில் குண்டுமழை பொழியும் அமெரிக்கா, இஸ்ரேல்; எங்கே இருக்கிறார் கமேனி?
Advertisement
Advertisement