ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவோம்: மதுரையில் பியூஷ் கோயல் பேட்டி

4

மதுரை: ''ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவோம் '' என மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மதுரையில் நாளை பிரதமர் மோடி தே.ஜ., கூட்டணியின் பிரசார பொதுக் கூட்டம், மத்திய அரசின் நகாய், ரயில்வே திட்டங்கள் துவக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக வரும் பிரதமர் திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. பிரதமரின் பொதுக் கூட்டம் ரிங்ரோடு அருகே மண்டேலா நகர் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக மேடை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.



இந்த கூட்டத்தில் பங்கேற்க மதுரை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது: ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவோம். ஜெயலலிதாவின் முதுகில் ஓ.பன்னீர்செல்வம் குத்திவிட்டார். தமிழக மக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.


தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம், இறையாண்மையை திமுக அரசு கெடுத்து விட்டது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாதது அவமானம். அதிமுக- பாஜ கூட்டணி குடும்பம் போல் உள்ளது. தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அமையும். தேஜ கூட்டணியை மக்கள் வெற்றி பெற செய்வார்கள். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

Advertisement