ராயன் கருப்பன் கோயில் மாசிக்களரி திருவிழா
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ராயன் கருப்பன் கோயில் மாசிக்களரி திருவிழா நடந்தது.
பிப். 27ல் முழுவீரன் தெரு கோயில் வீட்டிலிருந்து ராயன் கருப்பர் உள்ளிட்ட பரிவார தேவதைகளின் ஆயுதங்களை விழாக்குழுவினர் ஊர்வலமாக எடுத்து வந்தனர். வேங்கைப்பட்டி ரோடு புதுவயலில் உள்ள ராயன் கருப்பன் கோயிலில் ஆயுதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருவிழா துவங்கியது.
இரவு 9:00 மணிக்கு கரகம் எடுக்கும் நிகழ்வு நடந்தது, பாலாற்றில் இருந்து அம்மன் சாமியாடி கரகத்தை சுமந்தவாறு வந்தார். இரவு கோயிலில் சாமியாட்டம் நடந்தது. அரிவாளில் ஏறியும், ஆணிகள் மீது நடந்தும் அருள் வாக்கு கூறினர். சாமி வேட்டைக்குச் செல்லுதல் உள்ளிட்ட சம்பிரதாய வழிபாடு நடந்தது. பரிவார தேவதைகளுக்கு தானிய நைவேத்திய படையல் போடப்பட்டது. நேற்று காலை மண் பானையில் பொங்கல் வைத்து, கிடா பலியிடப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
திமுகவால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது ? இபிஎஸ் கேள்வி
-
மத்திய கிழக்கில் தொடரும் போர்; ஹோர்முஸ் நீரிணையில் இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
-
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான வாழ்வா... சாவா...? போட்டி; டாஸ் வென்ற இந்தியா பவுலிங்
-
'பணம் நமக்கு; பிரச்னை மக்களுக்கு' என்பதே திமுகவின் எண்ணம்: பிரதமர் மோடி காட்டம்
-
இந்தியாவில் 444 விமான சேவைகள் ரத்து; சர்வதேச விமான நிறுவனங்களின் சேவைகளும் நிறுத்தம்
-
திமுக தர முன்வந்துள்ள 25 தொகுதிகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; கிரிஷ் சோடங்கர்