இல்லாத ஹிந்தி திணிப்பு... முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
சென்னை: இல்லாத ஹிந்தித் திணிப்பை வைத்து ஏமாற்று அரசியல் செய்யாமல், உண்மையான மக்கள் பிரச்னைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை: எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத ஹிந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லி விட்டுச் சென்றாரா?
இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம், என, உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?
இவ்வாறு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பள்ளியில் ஒழுங்காக படிக்காதவனுக்கு எந்த மொழியும் வாராது அது ஹிந்தி மட்டும் அல்ல
தமிழும்தான் திராவிட எல்லையை விட்டுதாண்டாத இந்த கும்பல் அடுத்தவர்களின் புழைப்புக்கும்
வேட்டு வைக்கிறது எத்தனையோபேர்கள் ஹிந்தி படித்து விட்டும் ஹிந்தி படிக்காமலும் அடுத்த மாநிலங்களுக்கு சென்று வயிற்றுப்பொழைப்பை நடத்தி வருகிறார்கள் அவர்கள் அனைவரும் இங்கே ஹிந்தியை கற்றுக்கொண்டு செல்ல வில்லை ஆங்காங்கே வேலைக்கு சென்று பழக்கத்திலேயே ஹிந்தி மொழியை தானாகவே கற்றுக்கொண்டு மிகவும் நன்றாகவே பேசுகிறார்கள் எவ்வித்த கஷ்டமும் இல்லை
ஹிந்தி திணிப்பு என்பதெல்லாம் திமுக ஆடும் நாடகம். உண்மையாக ஹிந்தியை எதிர்ப்பவர்கள் என்றால், ஏன் அவர்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில், கல்லூரிகளில் ஹிந்தி மொழியில் பாடம் நடத்துகிறார்கள்? தமிழகத்தில் வடநாட்டினர் அதிகம் படிக்கும் கல்விக்கூடங்கள் அவர்கள் நடத்தும் கல்விக்கூடங்கள்தான்.
அனைவரும் ஹிந்தி படித்து விட்டு மைக்ரோசாப்ட் கூகுள் அமேசான் மெட்டா ஆப்பிள் பாங்க் ஆஃப் அமெரிக்கா போன்ற நிறுவனங்கள் சென்னை பெங்களூர் ஹைதராபாத் நகரில் செயல்படுவதை பாட்னா தர்பங்காவுக்கு மாற்ற வேண்டும்
ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆரியர் இப்படி பூச்சாண்டி காட்டித்தான் தமிழனை மூளைச்சலவை செய்தோம் .... அது அவனுக்குப் புரிந்துவிடக் கூடாது என்பதால், எங்களை வந்தேறிகள் என்று புரிந்து கொள்ளக் கூடாது என்பதால் நாம் அனைவரும் திராவிடர்கள் என்று உருட்டினோம் ....
தேசத்தை ஒன்றிணைக்கும் மொழி ஹிந்தி. அது தமிழர்களுக்கு அவசியம். ஏழை குழந்தைகள் இலவசமாக ஹிந்தி கற்க தமிழகம் உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும். வங்கி, ரயில்வே, ஏர்போர்ட், போர்ட், டால் கேட், ஆயில் சுத்திகரிப்பு நிலையம், போஸ்ட் ஆபிஸ் என்று பல இடங்களில் மத்திய அரசின் வேலை வாய்ப்புகள் கிடைக்கு ஹிந்தி அவசியம்.
இத்தனை வருடங்களாக இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் வாழ்ந்தார்கள் ஹிந்தி இல்லாமல். உனக்கு வேண்டும் என்றால் நீ வீட்டில் ஹிந்தியை படி . பிறகு ஏன் வட கிழக்கு மாநில மக்களை டெல்லி உத்தர பிரதேசத்தில் தாக்க வேண்டும்
ஒரே நாடு - ஒரே கல்வி முறை, ஒரே சட்டம், ஒரே மாதிரியான தண்டனைகள்,
இப்படி எல்லாமே பொதுவாக இருத்தல் வேண்டும். தம் பள்ளியிலும், வசதி உள்ளவர் மக்கள் படிக்கும் பள்ளியிலும் என்ன மொழி போதிக்க படுகிறதோ அதே போன்ற மொழிகளை சாதாரணை குடிமகனின் பிள்ளைகளும் படிக்கும் நிலை வர வேண்டும்.
சிந்திக்கும் திறனை இழந்து விட்டார்கள் ஆட்சியாளர்களும் அவரின் அடிவருடிகளும்.
அரிசி பஞ்சம் இருந்தது. பஞ்சம் ஒழிந்ததால் திமுகவிற்கு முதல் இடி. புதிய தலைமுறை இந்தி கற்க ஆரம்பித்து விட்டனர். திமுகவிற்கு இரண்டாவது இடி. நாஸ்திக கருத்து பரப்பி பார்த்தது. பட்டியல் இன மக்கள் அதிகம் கோவில் வழிபாட்டில் ஆர்வம். மூன்றாவது இடி. சரி மத்திய அரசு ஊழலில் செய்கிறதா? சிக்குகிறதா? அதும் இல்லை. நீதிமன்றம், தேர்தல் ஆணையம்.. ஒத்துழைப்பு இல்லை. பணத்திற்கு மயங்குவர் என்று கருதி திமுகவிடம் போதிய ஊழல் பணம் உள்ளது. திராவிடர் போல் மயங்க பலர் இல்லை. இந்தி எதிர்ப்பு பயன் இல்லை. உண்மை தான்.
கொஞ்சம் கண்ணை விழித்து பாருங்க மக்களே, மத்திய அரசின் எல்லா திட்டங்களும் ஹிந்திஇல் பெயர் சூட்ட படுகிறது. சென்னை விமான தலத்தில் வேலை பார்ப்பவர்கள் தமிழ் தெரியுமா? இல்லை தமிழ் நாடு பக்கம் வரும் ரயில்கள் தமிழ் தெரிந்த ஊழியர்கள் இருக்கிறார்களா? இது எல்லாம் ஹிந்தி திணிப்பின் அடையாளங்கள். இன்னும் பல உள்ளன.
இவைகள் டாஸ்மாக் மற்றும் தரம் குறைந்த கல்வியின் அடையாளங்கள். கடந்த காலங்களில் மத்திய அரசிலும் யுனைடெட் நேஷன்ஸ் நிறுவனங்களிலும் திட்டம் வகுக்கும் பணியினில் அதிக அளவில் தமிழர்கள் வல்லுனர்ககளாக இருந்தார்கள் ஆனால் தற்பொழுது அந்த எண்ணிக்கை மிகவும் குறைவு.
யாருப்பா நீ யாருமே இல்லாத கடையில் டீ ஆத்திக்கொண்டு இருக்க , த
1966-67 ல் பள்ளிக்கூடங்களில் ஹிந்தி மற்றும் சமஸ்க்ரிதம் கற்பித்த ஆசிரியர்களிடம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தினை எதிர்க்க போதிய சக்தி இல்லை. தற்பொழுது ஹிந்தி கற்பிக்கும் ஆசிரியர்களின் ஆதரவு ஹிந்தி எதிர்ப்பிர்க்குக் கிடைக்காது என்று எதிர்ப்பாளர்களுக்கு நங்கு அறிவர். ஆகவே தற்பொழுது ஹிந்தி எதிர்ப்பு என்பது உதட்டளவில் மட்டுமே.