இல்லாத ஹிந்தி திணிப்பு... முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

35


சென்னை: இல்லாத ஹிந்தித் திணிப்பை வைத்து ஏமாற்று அரசியல் செய்யாமல், உண்மையான மக்கள் பிரச்னைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.


அவரது அறிக்கை: எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத ஹிந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லி விட்டுச் சென்றாரா?


இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம், என, உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?

இவ்வாறு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement