'யாருக்கு அல்வா தர போறாரோ?'
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதியில் போட்டியிட, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரபிரபா விருப்பமனு அளித்துள்ளார்; இவர், 2016ல் இத்தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
கடந்த, 2021ல் இவருக்கு தான், 'சீட்' என கூறப்பட்டது; ஆனால், கடைசி நேரத்தில், மான்ராஜ் என்பவருக்கு சீட் வழங்கி, அவரும் ஜெயித்தார். இதனால், ஏமாற்றம் அடைந்த சந்திரபிரபா, இம்முறை சீட் பெறுவதில் உறுதியாக இருக்கிறார். கட்சியின் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.
மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தலைமையில், சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அவரது வலப்புறத்தில் மான்ராஜ், இடப்புறத்தில் சந்திரபிரபா அமர்ந்திருந்தனர்.
இதை பார்த்த நிர்வாகி ஒருவர், 'அண்ணன், ரெண்டு பேரையும் பக்கத்துலயே வச்சிருக்காரு... இதுல, யாருக்கு சீட்டும், யாருக்கு அல்வாவும் தர போறாரோ...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் சிரித்தனர்.
மேலும்
-
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் 'வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O' கருத்தரங்கு
-
ஈரானின் டிரோன் தாங்கி கப்பல் மீது தாக்குதல்; வீடியோ வெளியிட்டது அமெரிக்கா
-
“மேட் இன் பாரத்” என்றால் உலகிலேயே மிகச்சிறந்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும்
-
ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாராட்டு!
-
ஈஷா காவேரி கூக்குரல் வழிகாட்டுதலில் தி.மலை மாவட்டத்தில் 'ஒரு கிராமம் ஓர் அரசமரம்' திட்டம்!
-
ஐடி முதல் தடய அறிவியல் வரை; பழங்குடியின மாணவர்களின் கல்விச் செலவை ஏற்று வழிநடத்தும் ஈஷா!