அமெரிக்காவில் முதலீடு திட்டங்கள்; வெளியேறும் வளைகுடா நாடுகள்
வாஷிங்டன்: ஈரான் போர், பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதால், அமெரிக்கா உடனான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து போர் நடத்தி வருகிறது. இதையடுத்து வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்துகிறது. இதனால், வளைகுடா நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்பு, சுற்றுலாத்துறை மற்றும் பாதுகாப்பு வரவு செலவு திட்டங்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா உடனான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய துவங்கியுள்ளன. இது குறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'பைனான்சியல் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், இந்த நான்கு நாடுகளும் அமெரிக்கா உடனான தற்போதைய மற்றும் வருங்கால ஒப்பந்தங்கள் குறித்து தங்கள் உள்நாட்டு ஆய்வை துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக தற்போதை போர் சூழலை ஒரு எதிர்பாராத பேரிடராகக் கருதி, ஒப்பந்தங்களில் உள்ள 'போர்ஸ் மஜூர்' எனும் தவிர்க்க முடியாத சூழல் என்ற சட்டப் பிரிவை பயன்படுத்தி ஒப்பந்தங்களில் இருந்து விலக முடியுமா என ஆராய்ந்து வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியதாலும், எரிசக்தி மையங்கள் மீதான தாக்குதல்களாலும் வருவாய் குறைந்துள்ளது மற்றும் ஈரான் ஏவுகணைகளை இடைமறிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது போன்ற காரணங்களே இந்நாடுகளின் இம்முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்நாடுகள் உலகின் மிகப்பெரிய அரசு முதலீட்டு நிதி நிறுவனங்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது, அமெரிக்காவில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்தன.
இப்போது இந்த முதலீடுகள் திரும்ப பெறப்பட்டால், அது அமெரிக்க பொருளாதாரத்திலும் உலக சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் இருந்து இந்நாடுகள் விலகுவது, ஈரானுடனான போரை நிறுத்த அமெரிக்காவுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
எல்லாம் டிரம்பினால் வந்த வினை.
சீக்கிரம் டிரம்ப் கோமாளி அமெரிக்காவை பிச்சை எடுக்க வைத்து விடுவான்.
அரபு அரச குடும்பங்களுக்கு மக்கள் ஆதரவு மிகக் குறைவு. ஒன்றுக்கும் உதவாத சிறிய அளவிலான ராணுவப்படைகளையே வைத்துள்ளார். அமெரிக்கா வைத்திருக்கும் ராணுவ தளங்களை விலக்கிக் கொள்ள வாய்ப்பில்லை. அமெரிக்கப் படைகளின் பாதுகாப்பில்தான் ஆட்சிகள் நடக்கின்றன. ஆக அரபு அரசாங்கங்கள் அடிமைகள்தான். முதலீடுகள் அப்படியே தொடரும்.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தவிர பிற நாடுகளில் முதலீடு செய்து முதலை திரும்ப பெறுவது கஷ்டம். பாகிஸ்தான், சீனாவில் முதலீடு செய்து பாருங்கள். முதலும், வட்டியும் வராது. ஈரான் ஆயுதங்கள் போட்டு சரணடைவது அரபு நாடுகளுக்கு ஒரு பொது வழி.
டிரம்ப்பின் ரத்த வெறியால் அமெரிக்காவின் பொருளாதாரம் நசித்துப்போகும் ......
சந்தோஷம் இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் பத்திரமாக இருக்கும் லாபமாக இருக்கும்
அட நீங்க வேற, கட்டுமர திருட்டு திமுககாரர்கள் ஆட்டையை போட்டுவிடுவார்கள்.
அமெரிக்க்கா வே ஒரு பிச்சை எடுக்கும் நாடு மற்ற நாடுகளுக்கு சகட்டுமேனிக்கு வரிபோட்டு திங்கும் நிலைமைக்கு வந்துட்டு . அங்கு முதலீடு செய்யும் படிக்காத அரேபியாகாசுள்ள குதிரை மூடர்களை என்ன செய்ய??. இப்பாவது உப்புபோட்டு சாப்பிடும் உணர்ச்சி வந்தது கண்டு வளைகுடா நாடுகள் அவங்க முதலீடுடுகளை அமெரிகாவில் இருந்து எடுத்து விடட்டும்.மேலும்
-
ரூ.1,085 கோடி வங்கி மோசடி; தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ வழக்கு
-
நல்ல வேலைவாய்ப்பு எதிர்பார்த்து நியூசி., முன்னாள் பிரதமர் ஆஸி.,யில் குடியேற்றம்!
-
முதல்வர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் இருக்கிறார்: மத்திய அமைச்சர் எல்.முருகன்
-
மேற்காசியாவில் நிலவும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்: சீனா வலியுறுத்தல்
-
இஷ்யூ ஆகி விட கூடாது... வாசனை தரும் வெட் டிஷ்யூ
-
மானாமதுரையில் கைதி உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்