மேற்காசியாவில் நிலவும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்: சீனா வலியுறுத்தல்
பீஜிங்: ''ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்'' என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
ஈரான் முழுவதும் இஸ்ரேல், அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. பதிலுக்கு ஈரானும், மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கி வருகிறது. போர் 9வது நாளாக இன்றும் தொடர்ந்த நிலையில், பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இது குறித்து, சீனாவில் தலைநகர் பீஜிங்கில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் வாங் யீ கூறியதாவது:
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட போர் ஒருபோதும் நடந்திருக்க கூடாது. ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். போரை நிறுத்தி உடனடியாக சுமுகமான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். உலகம் காட்டாட்சி ராஜ்ஜியத்திற்கு திரும்ப கூடாது.
இந்த ஆண்டு சீன-அமெரிக்க உறவுகளுக்கு உண்மையிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சீனாவுடனான வேறுபாடுகளை அமெரிக்கா களைந்து கொள்ள வேண்டும். சிக்கலான சர்வதேச சூழலுக்கு மத்தியில், சீனா-ரஷ்யா உறவுகள் உறுதியாகவும் அசைக்க முடியாததாகவும் உள்ளன. இவ்வாறு வாங் யீ தெரிவித்தார்.
போர் தொடர்ந்தால் சீன ஆயுதங்களின் தரம் உலகுக்கு தெரிந்துவிடும்.
காட்டாட்சி ராஜ்யத்திற்கு திருப்பி விட்டது சீனா என்ற தரம் தெரியாத நாடு. குண்டூசி முதல் ராக்கெட் வரை தயாரித்தாலும் அனைத்தும் டூப்ளிகேட். சுமார் 20 ஆண்டுகள் கொள்ளை. ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏவுகணை, அணுகுண்டு எதற்கு? முதலில் அவர்களை கீழே போட சொல்ல முடியுமா? இல்லை என்றால் ரஷியா, சீனா தன் அணு ஆயுதத்தை அழிக்க வேண்டும்.
ஈரானுக்கு ஆயுதம் வழங்கியது சீனா ..
நீங்க ஒன்னு பண்ணுங்க ஒன்று அல்லது இரண்டு அணுகுண்டுவை எடுத்து இஸ்ரேல் தலையில் போடுங்கோ ஆட்டம் முடித்து வைக்கப்படும் பலிப்பற்றி கவலைப்படாதீர்கள் அவர்களின் கடவுள் அதைத்தான் விரும்புவார்
இவன் என்னமோ யோக்கியன் மாதிரி பேசுகிறான். போர்களை தூண்டும் பரம அயோக்கியனே இவன் தான். தைவான் விஷயத்தில் என்ன செய்கிறான்? இந்தியாவுடன் என்ன செய்கிறான்? இந்த சைனீஸ் ஓநாய்களை நம்பவே கூடாது.மேலும்
-
ஜனாதிபதியை அவமதித்தது திரிணமுல் காங்; மனதை புண்படுத்தியது என்கிறார் மோடி
-
உலக மகளிர் தினம்; தமாகா கொண்டாட்டம்
-
வாக்காளர்களை கவர ஒவ்வொரு கட்சியும் வாக்குறுதிகள்; இபிஎஸ் பேட்டி
-
ஈரோட்டில் கே.பி.சுந்தராம்பாள் சிலை திறப்பு
-
ரூ.1,085 கோடி வங்கி மோசடி; தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ வழக்கு
-
நல்ல வேலைவாய்ப்பு எதிர்பார்த்து நியூசி., முன்னாள் பிரதமர் ஆஸி.,யில் குடியேற்றம்!