திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்கும் மார்க்சிஸ்ட்!
சென்னை:''கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும் என கேட்டுள்ளோம். நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும்'' என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக தீவிரப்படுத்தியுள்ளது. தொகுதி பங்கீட்டுக்கு எல்லா கட்சிகளும் சம்மதித்த நிலையில், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சிகளிடம் மட்டும் இன்னும் முடிவு எட்டவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுக-மார்க்சிஸ்ட் இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
பிறகு நிருபர்களிடம் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது: தொகுதிகளின் எண்ணிக்கையை அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதில் எங்களுக்கு ஏற்பு இல்லை. கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும் என கேட்டுள்ளோம்.
தலைமையிடம் பேசிவிட்டு மீண்டும் பேசலாம் என பேச்சுவார்த்தை குழு தெரிவித்துள்ளது. ஆகவே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும். கடந்த காலத்தில் இல்லாத வகையில் நிறைய புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளன என்ற நியாயமான காரணத்தை திமுக தொகுதிப் பங்கீடு குழு சொன்னது.
அது ஏற்கத்தக்கது என்றாலும், நாங்கள் எதிர்பார்த்த கூடுதலான தொகுதிகளுக்கு வாய்ப்பில்லை என்ற நிலையில் கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதலான தொகுதிகளில் போட்டியில் போட்டியிட வேண்டும் என வற்புறுத்தி இருக்கிறோம்.
தலைவரிடம் பேசிவிட்டு நாளை சந்திக்கலாம் என்று கூறியிருக்கின்றனர். நாளை தொடர்ந்து பேசுவோம். இவ்வாறு சண்முகம் கூறினார். கடந்த 2021ம் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் 6 தொகுதிகளில் போட்டியிட்டது.
பாஜக வே அதிமுகவிடம் 50 சீட் கேட்கும் போது நாம 4 சீட் கேட்க கூடாதா என்று சொல்லி அடம் பிடிக்கிறார்களாம்
அது அப்படி இல்லேங்க தேசிய கட்சி என்று கூறிக்கொள்ளும் Congress டுகே 28 சீட்டும் ஒரு ராஜ்ஜிய சபா சீட்டும் கொடுக்கும்போது எங்களுக்கேன் ஒற்றைப்படையில் சீட்டென கேட்கிறார்களாம் . சரிதானே ப்ரோ
கேட்குற மாதிரி இவங்கெ கேட்பாங்கே. கூடுதல் சுவீட்டு பாக்சூகள் வந்தவுடன் நவதுவாரங்களையும் பொத்திககொண்டு போய்விடுவார்கள்.
அதே டயலாக் மீண்டும் சொல்வார்கள். மத வாத பாஜாகவை வீழ்த்த திமுக கொடுத்த சீட்டை வாங்கி கொண்டோம். எங்களுக்கு சீட்டு முக்கியமில்லை. பாஜாக மீது பழியை போட்டு விட்டு கொடுக்கிற சீட்டை வாங்கி கொள்கிறோம் என்று சொல்லி விடுவார்கள். ஆனால் பாஜாக தமிழ் நாட்டில் போட்டியிடுகிற தொகுதி 25 தான்.
கூடுதல் பெட்டிகளை கேட்டால் உங்க வழக்கப்படி உண்டியலில் மட்டும்தான் போடுவோம்ன்னு கேவலப்படுத்தி அனுப்புறாங்க.
கூடுதல் சீட் கேட்டோம், அவர்கள் கொடுத்ததை மூடிட்டு வாங்கி செல் இல்லாவிட்டால் கூட்டணியில் இருந்து தொலைந்து விடு என சொன்னார்கள், எனவே நாங்கள் பாலிட் பீரோ பொதுக்குழுவை கூட்டி, தீவிரமாக ஆலோசனை செய்து, தலைவர்கள்/தொண்டர்களின் கருத்தை கேட்ட பிறகு... அவர்கள் கொடுப்பதை மூடிட்டு வாங்கிக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம்.
6 இடங்களே அதிகம் இவர்கள் கிழிக்கின்ற கிழிப்புக்கு
ஒரு சீட் அல்லது 2 கோடி ..
எப்படியும் இந்த கூமுக கூட்டணி வெற்றிபெறப்போவதில்லை.. எதுக்கு சுமை.. பேசாம கழட்டிவிடுங்க.. அப்போதான் நான் திமுகவுக்கு ஓட்டுபோடுவேன்.மேலும்
-
மார்ச் 15ல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்; விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்
-
விமானப்படை தாக்குதலில் ஈரானின் புதிய ஆட்சியாளர் படுகாயம்!
-
தகுதியுள்ள எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது; தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உறுதி
-
காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடல்: அம்மா உணவகங்களை திறக்க இபிஎஸ் கோரிக்கை
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை; அண்ணாமலை பேட்டி
-
மண்ணைக் காக்க பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்!