காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை; அண்ணாமலை பேட்டி
சென்னை: காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. மிக விரைவில் இயல்புநிலைக்கு வரும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து, நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை அளித்த பதில்: சிலிண்டரை பொறுத்தவரை நமக்கு வரும் எல்பிஜி பெரும்பாலும் சவுதி அரேபியாவில் இருந்து வருகிறது. போர் ஆரம்பித்த பிறகு,ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடி வைத்துள்ளதால் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எந்த கப்பலும் வெளியே வர முடியாத அசாதாரண சூழ்நிலை இருக்கிறது. பல இடங்களில் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களை மத்திய அரசு வாங்கினாலும் கூட, ஆனால் எல்பிஜி காஸ் சவுதியில் இருந்து அதிகமாக வருகிறது.
25 நாட்கள்
மிக விரைவில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதி இயல்பு நிலைக்கு வந்த பிறகு, கப்பல்கள் வர ஆரம்பிக்கும். வணிக சிலிண்டர் புக் செய்ய வேண்டும் என்றால் 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். போருக்கு பிறகு இதனை மத்திய அரசு 25 நாட்களாக உயர்த்தி இருக்கிறது.
வீட்டிற்கு தேவையான காஸ் சிலிண்டர் தடையில்லாமல் வர வேண்டும். அதேபோல் நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் இடைஞ்சல் இல்லாமல் வர வேண்டும். நிச்சயமாக விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்.
இயல்புநிலை
தற்போது காஸ் பயன்பாடு பல மடங்கு உயர்ந்து இருக்கிறது. 60 சதவீதம் நாம் இறக்குமதி செய்து தான் மக்களுக்கு பெட்ரோலியம் பொருட்கள் கொடுத்த கொண்டு இருக்கிறோம். மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. மிக விரைவில் இயல்புநிலைக்கு வரும்.
எல்லா பிரச்னைக்கும் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறது. காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என பொதுவெளியில் தேவையில்லாத அச்சத்தை, பயத்தை யாரும் ஏற்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
சாட்சியம்
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான அவதூறு வழக்கில் சாட்சியம் அளித்தபின் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். பாஜ சார்பில் மக்களுக்கான நிவாரண உதவி மற்றும் ஆறுதல்கள் எல்லாம் அந்த நேரத்தில் தெரிவித்து இருந்தோம்.
ஆர்எஸ்பாரதி நிருபர்கள் சந்திப்பில், கள்ளக்குறிச்சி விஷசாராய திட்டத்திற்கு நான் சதி திட்டம் தீட்டியதாகவும், இந்த சம்பவத்தில் பாஜ சம்பந்தப்பட்டிருப்பதாகவும் சொல்லி இருந்தார். இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க கோரி நாங்கள் கடிதம் அனுப்பி இருந்தோம்.
மான நஷ்டஈடு வழக்கு
ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு இருந்தோம். இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, ஆர்எஸ்பாரதிக்கு எதிராக சாட்சியங்களை கொடுத்து இருக்கிறோம்.
கடந்த முறை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்த போது, டிஆர்பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்திய போது, என் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார். அதனால் டிஆர்பாலு மீது மேலும் ஒரு மான நஷ்ட ஈடு வழக்கு தொடுத்து இன்று புகார் அளித்து இருக்கிறோம். ஆர்எஸ்பாரதி மீது தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
@block_P@
விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? என்ற கேள்விக்கு அண்ணாமலை, '' விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துவிட்டார்.
ஒரு டீயும், காபியும் கலக்காது. காரணம் சித்தாந்தங்கள் வேறு. அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணி வலுவாக இருக்கிறது.
தேர்தலை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். வெற்றியை பெறுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது. நாளை திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டம் தேஜ கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் என நம்புகிறோம்'' என பதில் அளித்தார். block_P
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சென்னை சைதாப்பேட்டையில் நிருபர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு அண்ணாமலை பதில் அளித்தார். அவரது பேட்டி தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
நீங்க யாரு இதெல்லாம் சொல்ல, ? மத்திய அமைச்சரா, மாநில அமைச்சரா? பிரதமரா, முதலமைச்சரா? அல்லது சம்பந்தபட்ட துறை அரசு தலைமை அதிகாரியா???, தினமும் எதையாவது உருட்டிட்டே இருக்க வேண்டியது, ஒருவேளை ஊடகங்களுக்கு கன்டென்ட் கொடுகறதுதான் உங்க வேலையோ?
அண்ணாமலை சார், நீங்க என்ன மத்திய, மாநில அரசு அதிகாரியா? அல்ல மத்திய, மாநில மந்திரியா? நீங்கள் எப்படி சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து "யாரும் அச்ச பட தேவையில்லை" என்று பேசலாம்?
அரசாங்கம் பதில் சொல்லட்டும். நீங்கள் அல்ல.
காஸ் தட்டுப்பாடை வைத்து கேவலமாக அரசியல் செய்யும் கான்கிரேஸ் , தங்கள் கட்சி இஸ்லாமிய தலைவர்களை ஈரானுக்கு அனுப்பி பிரிச்சினையை தீர்த்த்து வைக்கு மா ? இந்தியாவில் காஸ் தட்டுப்பாடு வராமல் செய்யுமா ?
அண்ணாமலை சொன்னதில் என்ன தவறு இருக்கிறது ஸ்ட்ரைட் of ஹார்மோஸ் பிரச்சனை பற்றி சொல்கிறார்..... அதற்கு ஏதேதோ பிதற்றும் கும்பல்.....
தற்சமயம் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. பின் எதற்காக அத்தியாவசிய சட்டம் அமல்? காரணம், முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏஜென்சி எடுத்த கட்சிக்காரர்கள் பதுக்கல் செய்யாமல் இருக்க.
இப்படி யதார்த்தமாக உளர்வதற்கென்றே ஒவ்வொரு கட்சியிலும் அண்ஆமைகள் இருப்பார்கள் போல.
இவர் ஐபிஎஸ்சா காமெடி பீசா? இதே பத்திரிகையில் வெளியான இன்னொரு செய்தி, "சிலிண்டர் தட்டுப்பாடு: பதுக்கல் தடுக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமல்". அது பொய்யா?
ஓஹ் நீ இருநூறு ஓவா ஊப்பீயா ஹீஹீஹீ
ஏல benaras அறிவிலி... பதுக்கல் தடுக்கவே அந்த சட்டம்..
டீ காபி கலந்து வரலாறும் உண்டு. டீயில் இருக்கும் பாலை காபி உறிஞ்சிய வரலாறும் உண்டு. எரிவாயு தொடர்பான அவரது கருத்து யதார்த்தம்தான். ஆனால் எதிர்க்கட்சியாக இருந்தால் இதனைச் சொல்லி இருப்பாரா ?
காஸ் இல்லாத சிலிண்டர் வெடிக்காது. எனவே யாரும் அச்சப்படத்தேவையில்லை.
ஆமாம், பெட்ரோலியம் மினிஸ்டர் இவர், டிரம்ப் கிட்ட பேசிட்டு சொல்றாரு.
அவரு பெட்ரோலியம் அமைச்சர் இல்லைன்னு தெரிஞ்சும், அவர் கிட்ட போய், சிலிண்டர் தட்டுப்பாடு பத்தி , கேள்வி கேட்பீங்க, கேள்வி கேட்டதுக்கு பதில் சொன்ன , பெரிய.........
மாதிரி இங்கே வந்து கமெண்ட் போடுவீங்க, அப்படித்தானே? கேள்வி கேட்கிறவன் புத்திசாலி, கேட்ட கேள்விக்கு பதில் சொல்றவன் ........
அப்படித்தானே?
ஒனக்கு உலக அறிவு எப்படி இருக்கும்
புதிய benaras கொத்தடிமையாமேலும்
-
மார்ச் 15ல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்; விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்
-
விமானப்படை தாக்குதலில் ஈரானின் புதிய ஆட்சியாளர் படுகாயம்!
-
தகுதியுள்ள எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது; தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உறுதி
-
காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடல்: அம்மா உணவகங்களை திறக்க இபிஎஸ் கோரிக்கை
-
திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்கும் மார்க்சிஸ்ட்!
-
மண்ணைக் காக்க பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்!