நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை; இபிஎஸ்
சென்னை: தவெகவுடன் அதிமுகவோ அதன் கூட்டணி கட்சிகளோ எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறி உள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி;
பொறுமையாக எங்களின் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து, உணர்வுபூர்வமாக நாங்கள் நிறுத்துகிற அத்தனை வேட்பாளர்களும் வெற்றி பெறக்கூடிய சூழலில் தொகுதி பங்கீடு அமையும். எப்பொழுதும் தேர்தல் வருகிற போது ஸ்டாலின் தான் சிறுபான்மை மக்களை காப்பதாக கூறுவார்.
ஆனால் இஸ்லாமிய மக்களுக்காக இந்த அரசு என்ன செய்தது? அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த அரசாங்கம் அதிமுக. இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கே பாதுகாப்பில்லை. அப்படிப்பட்ட நிகழ்வுகள் தான் இப்போது தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.
இன்றைய முதல்வரை பொறுத்தவரை சிறுபான்மையின மக்களுக்கு திமுகதான் பாதுகாப்பாக இருக்கும் என்ற உணர்வை தூண்டிவிட்டு, ஒரு தோற்றத்தை வெளிப்படுத்தி அவர்களின் ஒட்டுக்களை வாங்குவதற்காக பேசுகிறார்.
திமுகவுக்கு எங்கே பலம் உள்ளது? பலம் இருந்தால் ஏன் புதிது புதிதாக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசாங்கம் மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுத்ததா? இல்லையே?
இந்த 15 நாளில் புதிய, புதிய திட்டங்களை அறிவிக்கிறார், அதற்கு நிதி ஒதுக்கீடு இல்லை... ஆனால் மக்களை ஏமாற்றுகிறார். ஸ்டாலினின் கவர்ச்சிகரமான பேச்சு எடுபடாது. இந்த ஆட்சியில் பார்ப்பது ஊழல் மட்டும்தான். எங்கள் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது, சூழல் இருக்கிறது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நிருபர் ஒருவர், விஜய் கூட்டணிக்கு வரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இபிஎஸ், இதுவரை அதிமுக அல்லது எங்களின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நீங்கள் குறிப்பிடுகிற (தவெகவை பெயர் சொல்லாமல் குறிப்பிடுகிறார்) அந்த கட்சியோடு எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றார்.
இவ்வாறு இபிஎஸ் பேட்டி அளித்தார்.
பேச்சு நடத்தியே பூஜ்ய விஜயை பெரிய மனுசன் பன்றீங்க?
இத்தை தான் 2 மாசமா பேச்சும் நடத்தீட்டு மேடை மேடையா சொல்லீட்டு ஐனங்களை ஏமாத்துறீங்க?
ஐயாவிற்கு இப்பொ பயம் விஜய் கூட்டணிக்குள் வந்து விட்டால் நம் பொழப்பு அம்பேல் ஆகி வி டும் என்ற நிலை. டில்லியிடம் சாட்டை இருக்கு ஆடுறா ராஜா என்றால் ஆட வேண்டிய நிலை. மற்றவர்களை உன் பேராசாயால் பழி தீர்க்கும் போது மட்டும் சந்தோசமாக இருந்ததா? ஊண்ணிலையை எண்ணி பார்க்க வேண்டிய நிலை.
ஸ்டாலினுடன் போட்டியிட நன்றி .........
நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இந்துக்கள் தீபம் ஏற்ற விடாமல் தடுக்கவில்லையா?மேலும்
-
தே.ஜ., கூட்டணிக்கு போட்டியே இல்லை; நயினார் நாகேந்திரன் கருத்து
-
சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு: அதிமுக - பாஜ கூட்டணி முன்னிலை
-
இந்த சட்டசபை தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல்; சொல்கிறார் தே.மு.தி.க., பிரேமலதா
-
கூடுதல் தொகுதி கேட்டு திமுகவுக்கு கெடு விதித்தார் த.வா.க., வேல்முருகன்
-
மதுபான கொள்கை வழக்கு; கெஜ்ரிவால் கோரிக்கையை நிராகரித்தது டில்லி ஐகோர்ட்
-
கண்ணை இமை காப்பது போல சிறுபான்மை மக்களை காப்பது அதிமுக மட்டுமே: இபிஎஸ்