மூதாட்டியின் 1 சவரன் நகை 'ஆட்டை' போட்டவர் கைது

சென்னை: மூதாட்டியிடம் நுாதனமாக பேசி 1 சவரன் நகையை 'ஆட்டை' போட்டவர் கைது செய்யப்பட்டார்.

சூளை, ஆண்டியப்பன் நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் காளியம்மாள், 76. இவர், 17ம் தேதி காலை சூளை, வி.வி.கோவில் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை வாங்க சென்றார்.

அப்போது வழியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரை வழிமறித்து ரம்ஜான் மாதம் என்பதால் ஒருவர் ஏழைகளுக்கு நகை மற்றும் பணத்தை தருவதாக கூறியுள்ளார்.

மேலும் பூட்டிய கடை அருகே அமர வைத்துவிட்டு, 'காதில் மாட்டலுடன் போட்டு இருக்கும் நகை மற்றும் பணத்தை கொடுங்கள்' சிறிது நேரத்தில் வருகிறேன் எனக்கூறி மர்மநபர் சென்றுள்ளார்.

வெகுநேரமாகியும் மர்ம நபர் வராததால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

இதில், டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த திருமலை, 50 என்பவர், மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி பணம் மற்றும் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், நகையை பறிமுதல் செய்தனர்.

Advertisement