ஜல்லி கற்கள் பெயர்ந்த களக்காட்டூர் சாலை: இருசக்கர வாகனங்கள் அடிக்கடி ‛பஞ்சர்'

களக்காட்டூர்:ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்த களக்காட்டூர் கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில் இருந்து குருவிமலை கிராமத்திற்கு செல்லும் கிராம சாலை உள்ளது. வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் ஆங்காங்கே சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது.

இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகின்றன.

எனவே, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள களக்காட்டூர் கிராம சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement