தொகுதி பிரச்னைக்கு தீர்வு காண முதல் ஆளாக ஓடி வருவேன்: என்.ஆர்.காங்., வேட்பாளர் உறுதி

புதுச்சேரி: 'தொகுதியில் உள்ள பிரச்னைக்கு தீர்வு காண நான் முதல் ஆளாக ஓடி வருவேன்' என என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமி பேசினார்.

சட்டசபை தேர்தலில், உழவர்கரை தொகுதியில் தேசிய ஜனநாக கூட்டணியில் என்.ஆர்.காங்., சார்பில் வேட்பாளர் நாராயணசாமி போட்டியிடுகிறார். இவர், உழவர்கரை தொகுதிகுட்பட்ட மோரிசான் தோட்டம், ஜெ.ஜெ. நகர்., ரோம் நகர், பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, என்.ஆர்.காங்., அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி வீடு வீடாக துண்டு பிரசுரம் கொடுத்து ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவேன். முதியோர் உதவித்தொகை உட்பட அரசின் அனைத்து திட்டங்களும் தொகுதியில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்வேன். தொகுதியில் உள்ள பிரச்னைக்கு தீர்வு காண நான் முதல் ஆளாக ஓடி வருவேன். என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

ஓட்டுசேகரிப்பின் போது, என்.ஆர்.காங்., நிர்வாகிகள், பா.ஜ., - ல.ஜ.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.,

Advertisement