சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றாளிகளுக்கு மரண தண்டனை
மதுரை: சாத்தான்குளத்தில் போலீஸ் ஸ்டேசனில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
குற்றவாளிகள்
கொரோனா ஊரடங்கு காலத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.
தண்டனை விதிப்பது குறித்த நிலைப்பாட்டை, தமிழக அரசு தரப்பில், மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து, ஏற்கனவே அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
அவர்களுக்கான தண்டனை விபரத்தை இன்று (ஏப்ரல் 6) மாலை 5.30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
நிரூபணம்
எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கு பொறுப்பும் இருக்க வேண்டும். காவல் நிலை மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது. இருவரும் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.பென்னிக்ஸ் ஜெயராஜை இரக்கமின்றி கொன்றதை கொடூரமாக தான் கருத வேண்டும்.
பழிவாங்கும் நோக்கில் இருவரும் அடித்து கொல்லப்பட்டுள்ளனர்.உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.தந்தை, மகன் மீது பொய் வழக்கு போட்டுள்ளது நிரூபணம் ஆகியுள்ளது.
தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் கொடூரமாக தாக்கியதை எளிதாக கருத முடியாது. சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டு உள்ளன.நிராயுதபாணியாக இருந்தும் இருவரையும் இரவு முழுவதும் தாக்கி உள்ளனர். 2 பேர் மீதும் எந்த குற்றவழக்கும் இல்லை. அவர்களை தாக்கிய போலீசார், நல்ல அறிவு வளர்ச்சி உள்ளவர்கள். நன்கு படித்துள்ளனர். இதை சாதாரண குற்றமாக கருத முடியாது.
அரிதான வழக்கு
நீதிமன்றம் தலையிடாவிட்டால், தந்தை மகன் உடலுடன் உண்மையும் அடக்கம் செய்யப்பட்டு இருக்கும். அரசு அதிகாரிகளே விதிகளை மீறியுள்ளனர். இந்த கொலை வழக்கில் வேலியே பயிரை மேய்ந்துள்ளது. ஒரே நேரத்தில் தந்தை மகன் என்ற குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது. அரிதினும் அரிதான வழக்கு. மரண தண்டனை தான் தர வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டி உள்ளது.
அபராதம்
ஆயுள் தண்டனை காவல்துறைக்கு அச்சம் தராது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க தண்டனை தர வேண்டும். குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியிலான தண்டனை வழங்க வேண்டும். யார் அதிகமாக அடித்தார்கள் என்று வேறுபாடு காட்ட முடியாது. அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக்கூறிய நீதிபதி 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 9 போலீசாருக்கும் விதிக்கப்பட்ட மொத்த அபராத தொகை ரூ.1.04 கோடியாகும். இந்த தொகையை பென்னிக்ஸ் தாயாரிடம் வழங்க வேண்டும். என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை இந்த 9 போலீஸ்காரர்களுக்கு மட்டும்தானா? போலி சான்றிதழ் வழங்கிய டாக்டர், மனசாட்சியே இல்லாமல் மூச்சு திணறி இறந்து விட்டார்கள் என்று பொய் சொன்ன ஆட்சியாளர்கள் இவர்களுக்கு தண்டனை கிடையாதா?
மேலும் இந்த காவல்நிலையத்தில் அடிப்பதற்கு என்று அடி ஆட்களாக போலீசாரின் ஏவல் ஆட்களாக இருந்து அப்பா மகனை அடித்து கொன்ற அடி ஆட்களுக்கு தண்டனை கிடையாதா?
என்ன கொடுமை?
இரட்டை மரணதண்டனை என்றால் என்ன? இரண்டு முறை தூக்கில் போடுவார்களா ?
Saattankulam judgement should teach a lesson to other merciless and arrogant cops.
இந்த குற்றவாளிகள கருட புராணத்துல சொல்லப்பட்டுள்ள பல வகையான தண்டனைகளை நிறைவேற்றும் வழிகளில் ஒன்றின் மூலம் நிறைவேற்றலாம்.
அட போங்கய்யா அதான் ஏற்கனவே சிறையில் இருக்கும் குற்றவாளிகளை விடுதலை செய்ய அரசுக்குத்தான் முழுமையான அதிகாரம் இருக்கு ஆளுநரே குறுக்கிட முடியாது அப்படின்னு தீர்ப்பு சொல்லியாச்சே இனி தண்டனை கொடுத்த பின் குற்றவாளிகளை விடுதலை செய்ய அரசுக்கு அதிகாரமிருக்குன்னு சொல்ல எத்தனை நேரம் ஆகும்? நீதிமன்றம் தன் கடமையைச் செய்து விட்டது இனிப் பலனை எதிர்பார்க்கக்கூடாது. கீதை சொன்னதுதான் இன்னும் மேல் முறையீடு கேஎஸ்முறையீடு கருணை மனு மனித நேயம் என எத்தனையோ வழி இருக்கே. செத்தவனைப் பற்றி கவலைப்பட்டு என்ன பயன் இவர்களுக்கு மட்டும் கொடுத்த தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது உலக அதிசயம்
அப்படியே அமரர் அஜித்குமார் அவர்களை கொன்ற போலீஸ்காரர்களும் , அவர்களை ஏவிய நிகிதா மற்றும் அவரது நண்பர் அரசு சார்ந்திருப்பவர்களுக்கும் , அண்ணா பல்கலையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கட்சிக்காரர்களுக்கு, அண்ணாசாலையில் திமுக கட்சி கொடி கட்டி பெண்களை காரில் துரத்தி துப்புறுத்திய திமுகவினருக்கும் , கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்று 70 பேரை கொன்றவர்களுக்கு , 2000கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்து , சூடோ போன்ற போதைப்பொருளை கடத்தி அதன்மூலம் நாட்டை சீரழிக்கும் அயலக அணி தலைவருக்கும் , அவனது குடும்பத்தினருக்கும் , அவனது நண்பர்களுக்கும் ஒரே சமயத்தில் தீர்ப்பு சொல்லிடுங்க அய்யா
காலம் கெட்டு போய் விட்டது வேலியே பயிரை மேய்கின்றது இந்த வேலிகள் தேவைதானா எனற வினா எழுகின்றது. என்றாலும், நியாயமாக செயல்படும் போலீஸ் அதிகாரிகளை நான் நேரில் சந்தித்திருக்கிறேன்.
காவல் துறைக்கு நன்னடத்தை ஒழுக்கம் மரியாதை மனநிம்மதி தியானம் போன்றவை போதிக்க வேண்டும் .சட்டம் கடமையை செய்யும் என்பது அவர்களுக்கு தெரிய வேண்டும் .சிறந்த மனிதர்கள் காவலர்கள் ஆனால் சமூகம் சிறந்த சமூகம் ஆகும் .என் கருத்து .
மரண தண்டனையா ??? பயமில்லை.... உயர் நீதிமன்றம் இருக்கு, உச்சநீதிமன்றம் இருக்கு..... என்கிற எண்ணம் பொதுமக்களிடையே உண்டு இவர்கள் போலிஸ் வேற.....பயமில்லாமல் இருப்பார்கள்....!!!
மரணதண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்.....மேலும்
-
அசாம் முதல்வர் மனைவி மீது புகார் கூறிய காங்., நிர்வாகி பவன் கெரா வீட்டில் 'ரெய்டு'
-
வீட்டில் பயங்கரவாதிகள் குண்டு வீச்சு: மணிப்பூரில் 2 குழந்தைகள் உயிரிழப்பு
-
அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!
-
வெனிசுலாவிலும் மவுசு உள்ளது :அமெரிக்க அதிபரின் காமெடி
-
வங்கதேசம் போராட்டத்தை துாண்டியதாக முன்னாள் சபாநாயகர் கைது
-
லஷ்கர் பயங்கரவாதிகள் 5 பேரை கைது செய்தது காஷ்மீர் போலீஸ்