மலைவாழ் மக்களுக்கு உதவி

திண்டுக்கல்:திண்டுக்கல், கொடைக்கானல் வனச்சரக கோட்டங்களில் துணைக்காடுகள், அடர் வனப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு காட்டு தீ குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தேன் மரவள்ளிக்கிழங்கு அறுவடை, தோட்ட வேலை, மலைப்பயிர் அறுவடைக்காக காட்டுக்குள் தங்கும் போது சமைக்க பற்ற வைக்கும் நெருப்பை சரிவர அணைக்காமல் விடுவதால் காட்டுத்தீ உருவாக வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மலைவாழ் மக்களுக்கு அரிசி, பருப்பு அடங்கிய மளிகைத்தொகுப்புகள் வழங்கப்பட்டன. இயற்கையாக உண்டாகும் காட்டுத் தீயை தடுக்க வனப்பகுதியில் ஒவ்வொரு 5 கி.மீ.,க்கு தீத்தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement