குவாரி குட்டை நீரில் மூழ்கி பெண் பலி
வானுார்: கிளியனுார் அருகே குவாரி குட்டையில் நீரில் மூழ்கி பெண் இறந்தார்.
சென்னை, வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் அருண்ராஜ். இவரது மனைவி எமிமால், 24; இவர்கள் நண்பர்களுடன் கிளியனுார் அடுத்த நல்லாவூரைச் சேர்ந்த கிருபாநிதி என்பவரின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை கொந்தமூர் கிராமத்தில் மைடாஸ் குவாரி குட்டையில் குளித்தனர். அப்போது, துணி மாற்றுவதற்கு நின்றிருந்த எமிமால், தவறி குட்டையில் ஆழமான பகுதியில் விழுந்து நீரில் மூழ்கினார்.
தகவல் அறிந்து வந்த வானுார் தீயணைப்பு நிலையத்தினர் குட்டையில் மூழ்கி இறந்த எமிமால் உடலை மீட்டனர்.
இதுகுறித்து கிளியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
த.வெ.க., விஜய் சொல்வதெல்லாம் சாத்தியமற்றது: மார்க்சிஸ்ட்
-
மொத்தம் 7400 பேர் வேட்புமனு தாக்கல்; நாளை மறுநாள் வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்
-
ஈரான் உளவு பிரிவு தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டார்
-
டிரம்பை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் போட முடிவு?
-
கெடுவை நீட்டித்தார் டிரம்ப் ; கிண்டலடிக்கிறது ஈரான்
-
வங்கதேசம்: தட்டம்மை நோய்க்கு 98 குழந்தைகள் பலி
Advertisement
Advertisement