காரில் இருந்தவரிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்

கம்பம்:சட்டசபை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை கம்பமெட்டு பைபாஸ் ரோட்டில் பறக்கும் படை அலுவலர் விஜயன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது கோட்டயத்தில் இருந்து வந்த காரை சோதனையிட்டனர். காரை ஒட்டி வந்த அஜ்மல்கானிடமிருந்து ரூ.2 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்ததை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணம் உத்தமபாளையம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement