வட்டியின்றி குடிநீர் கட்டணம் செலுத்த அவகாசம்
பெங்களூரு: பெங்களூரில் நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணத்தை, வட்டியின்றி செலுத்த வரும் ஜூன் மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரில், 5.11 லட்சம் பேர் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். மொத்த நிலுவைத்தொகை 851.33 கோடி ரூபாய். இதில், அசல் தொகை 539.43 கோடி; வட்டி தொகை 311.90 கோடி ரூபாய்.
நிலுவை தொகையை வசூலிப்பதற்காக, ஓ.டி.எஸ்., என்ற ஒரு முறை தீர்வு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும். இத்திட்டத்தின் மூலம், குடிநீர் கட்டணத்தை வட்டியின்றி செலுத்தலாம். நிலுவை தொகையில் முழு அசல் தொகையையும் செலுத்துவோர் வட்டி செலுத்த தேவையில்லை. 100 சதவீதம் வட்டி தள்ளுபடி வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மேற்குவங்கத்தில் பெரிய மாற்றம் நிகழ போகிறது; தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
-
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; பொதுநல வழக்கு தள்ளுபடி
-
அது மட்டும் நடந்தால் தேர்தலில் இருந்து விலகி விடுவேன்; சீமான் சவால்
-
புதுச்சேரியில் வாக்காளர்களை கவர்ந்த ரோபோ 'நிலா'; ரோஜா பூ கொடுத்து வரவேற்று அசத்தல்
-
தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படுத்தும்; சொல்கிறார் பாஜ தேசிய தலைவர் நிதின்
-
தலைமை செயலகம் முன் திமுக கொடி தீ வைத்து எரிப்பு; போலீஸ் ஏட்டு கைது