ஓட்டளிப்பதன் அவசியம் குன்னூரில் விழிப்புணர்வு

குன்னுார்: குன்னுாரில், 'அனைவரும் வாக்களிப்போம்' என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

குன்னுார் சிம்ஸ் பார்க் பகுதியில் வருவாய் துறை சார்பில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு

நிகழ்ச்சியை, மாவட்ட கூடுதல் கலெக்டர் அபிலாஷா கவுர் துவக்கி வைத்தார். அனைவரும் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கம், பேரணி நடந்தது. ஓட்டளிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படுவதை அடையாளப்படுத்தும் விதமாக, மகளிர் ஒன்றிணைந்து பிரம்மாண்டமாக விரல் வடிவில் அணிவகுத்து நின்று கவனத்தை ஈர்த்தனர்.

'ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்பன உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டன.

Advertisement