மங்களூரு - எழும்பூர் சிறப்பு ரயில் அறிவிப்பு

சேலம்: மங்களூரு - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், இன்று இரவு, 8:00 மணிக்கு புறப்படுகிறது.

இந்த ரயில், காசர்கோடு, கஞ்சன்காடு, பையனுார், கன்னுார், தலசேரி, வடக்கரா, கோழிக்கோடு, திரூர், சோரனுார், பாலக்காடு, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியே, நாளை மதியம், 12:30 மணிக்கு, சென்னை, எழும்பூரை அடையும்.

அதிகாலை, 5:20க்கு ஈரோடு, 6:27க்கு சேலம் வந்து செல்லும். மறுமார்க்க ரயில், நாளை மதியம், 2:30க்கு கிளம்பி, அடுத்தநாள் காலை, 6:55க்கு மங்களூருவை அடையும். இரவு, 7:47க்கு சேலம், 8:40க்கு ஈரோடு வந்து செல்லும்.

அதேபோல், மங்களூரு - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், ஏப்., 15 மாலை, 4:00 மணிக்கு புறப்பட்டு, சேலம் வழியே அடுத்தநாள் காலை, 10:45க்கு எழும்பூரை அடையும். அதிகாலை, 2:10க்கு ஈரோடு, 3:17க்கு சேலம் வந்து செல்லும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement