மகள் மாயம் :தந்தை புகார்

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

சங்கராபுரம் அடுத்த வடசிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகள் கோமதி, 20; இவர்,. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் பி.இ., சிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கோமதியை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement