த.வா.க., வேட்பாளர் கண்ணன் வடலாரில் ஓட்டு வேட்டை

வடலுார்: குறிஞ்சிப்பாடி த.வா.க., வேட்பாளர் வடலுார் பகுதியில் ஓட்டு சேகரித்தார்.

குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் த.வா.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கண்ணன், வடலுார் சுற்றுப்பகுதி கிராமங்களான கருங்குழி, மருவாய், நயினார்குப்பம், அரங்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கடைகள், வீடுகளில் நேற்று ஓட்டு சேகரித்தார். அப்போது, தனக்கு ஒதுக்கப்பட்ட கேமரா சின்னத்தில் ஓட்டு அளிக்க வாக்காளர்களிடம் கேட்டு கொண்டார்.

அவருடன் குறிஞ்சிப்பாடி தொகுதி தலைவர் அய்யப்பன், செயலாளர் வெங்கடேசன், நகர செயலாளர் முருகானந்தம், வடலூர் நகர செயலாளர முருகன், ஒன்றிய செயலாளர்கள் அரிபுத்திரன், பாலமுருகன், தயாநிதி, சுப்பரமணியன், தனகோடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement