பிரசாரத்துக்கு வராத ராகுலை ஸ்டாலினால் மிரட்ட முடியுமா?: குஷ்பு கேள்வி
மதுரை: ''பிரதமர் மோடியை பார்த்து மிரட்டல் விடுக்கும் முதல்வர் ஸ்டாலின், பிரசாரத்திற்கு வருமாறு ராகுலை மிரட்டுவாரா,'' என தமிழக பா.ஜ., துணைத் தலைவர் குஷ்பு கேள்வி எழுப்பினார்.
மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசை எதிர்த்து கேட்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் என துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார். உலக தலைவர்கள் பிரதமர் மோடியை பாராட்டுகின்றனர்.
மோடியிடம் பேசிவிட்டு தான் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார். நிலைமை அப்படி இருக்க, உலக தலைவர்களுக்கு தெரியாதது, ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் தெரிந்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தான், நாங்கள் வைத்ததே சட்டம் என்ற நிலை உள்ளது.
தமிழக வளர்ச்சி பற்றி வெள்ளை அறிக்கை கேட்டால், எங்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனரே தவிர, வெள்ளை அறிக்கையை தரவில்லை.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை வீடியோ வெளியிடுகிறார். ஒரு முதல்வர் பேசும் பேச்சா இது; நாட்டின் பிரதமரை பார்த்து கேட்கும் கேள்வியா இது.
பிரதமரை மிரட்டி பேசும் முதல்வர் ஸ்டாலின், 'காங்கிரசுக்கு 28 தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறோம். நீங்கள் ஏன் பிரசாரத்திற்கு வரவில்லை' என ராகுலை மிரட்ட முடியுமா; அதற்கு, ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா?
இவ்வாறு அவர் கூறினார்.
விஜய்கூட சில கூட்டத்துக்கு வரவில்லை, பொய் கேட்க தைரியம் இருக்கா?
ராகுல் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? ராகுலுக்காக இல்லை வோட்டு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு தான் வோட் . ராகுல் போகும் இடம் எல்லாம் தோல்வி தான். அதனால் அவர் வராதது எங்களுக்கு மகிழ்ச்சியே .
அப்ப எதுக்கு வடக்கன் படிக்காதவன் பனி பூரி காங்கிரஸ் கட்சியுடன் விடியல் தேர்தல் கூட்டணி வைக்கணும் ??....கூட்டணியை விட்டு வெளியேறவும் ....
28சீட் தாரைவார்க்கனும் முத்துவேல் வாரிசுகளை நிக்க வைக்கலாம்ல பாய சுருட்டலாம் பூசணிக்காய சுருட்டுற ஒரே கட்சி உன்டீம்காதான் உருட்டுறதுக்கு அளவில்லாம உருட்டி தலைவனிலிருந்து அல்லகை வரை அசிங்கப்படாதீங்கடா
புத்திசாலியின் கேள்வியாக இல்லை. எதிரணியில் இருப்பவரைதான் கேள்வி கேட்பார்கள்.
அரசியல் படித்திருந்தால் தெரியும், சினிமாக்காரிக்கு என்ன புரியும்.
இந்திரா அம்மையாரையே மிரட்டிய கும்பல், அவர் பேரன் எல்லாம் தீயமுகவுக்கு ஒண்ணுமே இல்லை
ஆமாம். நேருவின் மகளே வருக. நிலையான ஆட்சி தருக என்று.மேலும்
-
ஓசையின்றி குடிநீர் கட்டணம் உயர்வு; வீட்டு உரிமையாளர்கள் புகார்
-
தேர்தலுக்கு 7 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறுமா?
-
மாநிலத்தில் அவிநாசி முன்மாதிரி தொகுதியாகும்; பா.ஜ. வேட்பாளர் முருகன் பிரத்யேகப் பேட்டி
-
வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 4 பேர் கைது
-
தேர்தல் பிரசாரத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார்; விஜய் மீது வழக்குப்பதிவு