வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 4 பேர் கைது
மீஞ்சூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே, வீட்டு மாடியில் உள்ள அறையில் படித்துக்கொண்டு இருந்த கல்லுாரி மாணவியை கஞ்சா போதை கும்பல் கொடூரமாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
மீஞ்சூர் பகுதியை சேர்ந்த இளம்பெண், சென்னையில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில், இளங்கலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் இரவு, 10:30 மணியளவில் மாடி வீட்டில் உள்ள அறை ஒன்றில் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருந்தார். தரை தளத்தில் உள்ள வீட்டில் கல்லுாரி மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இருந்தனர்.
திடீரென மாடி வீட்டு அறையில் இருந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் மாணவி இருந்த இடத்திற்கு ஓடினார்.
அங்கு ரத்த வெள்ளத்தில் மாணவி துடியாய் துடித்தார். உடனடியாக அவரை மீட்டு, அருகில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எட்டு இடங்களில் கொடூரமான வெட்டுக்காயங்கள் இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயன்ற மர்மநபரை மாணவியின் உறவினர்கள் நையப் புடைத்து விசாரித்தனர். அப்போது அவன் மித மிஞ்சிய கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவன் மாணவியின் வீட்டருகே உள்ள மற்றொரு தெருவைச் சேர்ந்த ரோலக்ஸ் என்கிற டில்லிபாபு, 24, என்பது தெரியவந்தது. அவன் மீது, ஏற்கனவே கார் கண்ணாடியை உடைத்து திருட முயன்ற வழக்கு இருப்பதும் தெரியவந்தது.
டில்லிபாபு உள்ளிட்ட நான்கு பேர் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். ஒருவன் மட்டும் வீட்டின் கீழ் தளத்தில் ஆட்கள் நடமாட்டம் குறித்து கண்காணித்தபடி நின்றுள்ளான். மற்ற மூன்று பேர் மாணவியின் வீட்டின் பக்கப்பகுதியில் இருந்து ஏறி குதித்து மாடிப்பகுதிக்கு சென்று உள்ளனர்.
அங்கு மாணவியிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். மாணவி திடீரென கூச்சலிட்டதால் மூன்று பேரும் அம்மாணவியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்ய முயன்றுள்ளனர்.
நேற்று இரவு அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் மீஞ்சூர் அருகே, வல்லுாரைச் சேர்ந்த சித்திக், 19, லோகேஷ், 22, முத்தமிழ்செல்வன், 24 என்பது தெரியவந்தது. நான்கு பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
@block_G@
பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்: கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி ஆகியவைதான், தி.மு.க., ஆட்சியின் அவலம். படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் தி.மு.க., மாடல்.
அன்புமணி, பா.ம.க., தலைவர்: தி.மு.க., ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதே, இதற்கு காரணம். தி.மு.க.,வை ஆட்சியிலிருந்து அகற்றினால்தான், பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்: ஐந்து ஆண்டு கால தி.மு.க., ஆட்சியின் அவலம், இன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, போதை பொருள் புழக்கம் பெருகி, வீட்டிற்குள் இருக்கும் நம் குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை இன்று உருவாகி இருக்கிறது.
தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர் : சென்னையில் துவங்கி, கடைக்கோடி கிராமங்கள் வரை, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, புரையோடி போயிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால், தங்களின் சொந்த வீட்டில் கூட, பாதுகாப்பாக இருக்க முடியாத சூழல், தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.block_G
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் இருக்குன்னு திமுக வின் கூட்டணிக்கட்சி அம்மையாரே ஒத்துக்கொண்டபிறகு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமலிருந்தால்தான் ஆச்சர்யம். போதை கலாச்சாரத்தை தடுக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்காவிடில் இனி இந்த சந்ததியினர் அழிவதை யாராலும் தடுக்கமுடியாது .
விடுப்பா, விடுப்பா, இவனுங்க எல்லாம் நம்ம திமுக கட்சிக்காரனாகத்தான் இருக்கும். சும்மா பொய்க்கட்டு போட்டு, சிறையில் சொகுசு வாழ்க்கை அமைத்துக் கொடுங்கள். தமிழ்நாட்டை போதையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிய இரும்புக்கை கோப்பால் சாருக்கு ஒரு ராயல் சல்யூட்.
இப்போதாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சினிமாவில் பெண்ணை விரட்டி காதலிக்க கற்றுக்கொடுத்த திரு ஜோசப் விஜய்க்கு ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று ??? இப்படிப்பட்ட தற்குறிகளை இந்த மாதிரி கேடுகெட்ட செயல்களை செய்ய தூண்டுவது விடியலின் டாஸ்மாக்கும், கஞ்சா போதையும் தான். டாஸ்மாக்கிற்கு தமிழக அரசு ஒப்புதலும், கஞ்சாவிற்கு திமுக இளைஞர் அணி ஜாபரும் ஒப்புதல் இருக்கையில் தற்குறிகளுக்கு கொண்டாட்டம் தான்.
திமுக ஒரு தீய சக்தி என கூறும் ஜோசப் விஜய் ஒரு தற்குறி சக்தி இவர்களை நம்பி ஓட்டு போடுவேன் என சொல்லும் தமிழக இளைஞர்கள் தாங்களும் கெட்டு, நாட்டையும் கெடுப்பர். தவெக வில் தஞ்சமடைந்த திராவிட கட்சிகளின் அதிருப்தியாளர்கள், செயலூக்கம் அற்ற வெட்டிவாயர்கள், படித்தும், சினிமா மோகத்தால் பிரயோசனமற்ற இளைஞர், இளைஞிகள் இவர்களகல் நாட்டுக்கு கேடு தான். ஹூம்.
அதுக்குதான் tvk இருக்கே, ஓட்டுகளை பிரிக்க... ஒண்ணு dmk வரனும் இல்லை அதிமுகவுக்கு போற ஓட்டை பிரித்து யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கக்கூடாது திமுக மிக தெளிவாக இருக்கிறது... தற்க்குரிகள் நாட்டை சீரழிக்குதுகள்... பணம் பட்டுவாடவை நிறுத்தனும்னா ஒரே வழி... அரசியல்வாதிகள் பிரமாண பாத்திரத்தில் உள்ளது மட்டும் அவர்களுக்கு சொந்தம் மற்ற சொத்துக்கள் அனைத்தும் அரசு கஜானாவில் சேர்க்கணும்... கடனும் அடையும், காசால் ஓட்டையும் வாங்கமுடியாது...
APPA APPAPPA ENNA KODUMAI IDHU KEDU KETTA DRAVIDA MODEL AATCHIYAA ILLAI TASMAC KANJA AATCHIYA. KEVALAM. IDHULA THURU PIDITHA IRUMBU KARAM BUILD UP VERA. ARUVARUPPIN UCHAM.
என்று ஆர்ப்பாட்டம் பண்ணுகிறான் .. இக்கற்கள் இன்று நடந்ததற்கு வெறும் அறிக்கை விட்டு கிட்டு இருக்கிறார்கள்.. நாளையே முழு கடை அடைப்பு பஸ் மறியல் என்று போராட்டத்த முன்னெடுக்க வேண்டாமா...
கூமுட்டை எதிர்க்கட்சிகள்... ஒண்ணுமேப்பில்லாத தொகுதி மருவறைக்கு என்ட்ரி நடக்க போவதும் கேடு கேட்ட இழிபிறவி கருப்பு கோடி அக்கொடி ஆர்ப்பாட்டம் சட்ட நகல் erippu
வீ ஸ் சேகரினு ஒருவர் மைண்ட் வாய்ஸ் இவர்களுக்கு வக்காலத்து வாங்கினாலும் வாங்குவர் : எப்படி என்றல் "அந்த பொண்ணு ஏன் இரவு 10.30 மணிக்கு படிக்கனனும்? அதுவும் தன வீட்டுல? சாயங்காலம் 6 மணிக்கு கைய கால அலம்பிண்டு நேத்திக்கு இட்டுண்டு படிச்சிட்டு 7.30 மணிக்கெல்லாம் தூங்க போய்டணும் ... இப்படி பொறுப்பு இல்லாம ராத்திரி 10.30 மணிக்கு அதுவும் மாடில தனியா படிச்சா அரசாங்கமா பொறுப்பு? வீடு மாடிக்கேல்லமா போலீஸ் பந்தோபஸ்து போட முடியும்? "
வீட்டில் பெற்றோர்களுடன் இருக்கும் பெண்களையே இவர்கள் நாசம் செய்ய கிளம்பிவிட்டார்கள். இது பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என வரிந்து காட்டுகிறார்கள். ஒரு பெண்ணாக திருமதி பிரேமலதா விஜயகாந்த் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை பாதிக்கப்பட்டவர் தமிழச்சி போல
அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக இருக்க வாய்ப்பில்லை, இந்நேரம் திருமா, வைகோ கம்யூனிஸ்ட் ஆகியோர் தெருவில் இறங்கி போராடி இருப்பார்கள். இல்லை இல்லை இது விடியல் அரசு அல்லவா? தேர்தல் நிதி வேறு வந்து சேர்ந்துவிட்டது யார் வீட்டில் எழவு விழுந்தாலும் இவர்கள் ஜெயித்து ஆகவேண்டும். மக்கள் தேதி 23க்கு காத்துக்கொண்டிருக்கிறார்.
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. திருமாவளவன் வாய்மூடி யிருக்கிறார் என்பது அந்த மாணவி நீங்கள் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என்பதை உறுதிசெய்வது போல் இருக்கிறது. வேங்கைவயல் சம்பவத்தை நினைவில் நிறுத்துங்கள், அப்போது எது உண்மையாக இருக்கலாம் என்பது விளங்கும்.மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு