பைக் - கார் மோதல் 2 பெண்கள் உயிரிழப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில், இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

கடலுார் மாவட்டம், காடாம்புலியூர் பெரியபுறங்கனியை சேர்ந்தவர் அருள், 45; விவசாயி.

இவர், நேற்று காலை 8:30 மணியளவில், தன் முந்திரித்தோப்பில் , முந்திரி கொட்டை அறுவடை செய்ய, ஒறையூரை சேர்ந்த மல்லிகா, 32, ரஞ்சிதா, 35, ஆகிய இருவரை, தன் பைக்கில் அழைத்துக்கொண்டு, கீழக்கொல்லை நோக்கி சென்றார்.

Tamil News

வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில், கீழக்கொல்லை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார், இவர்கள் பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே மல்லிகா, ரஞ்சிதா உயிரிழந்தனர். அருள், பலத்த காயமடைந்தார்.

முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement