தயாரிப்பாளர் சங்கம் 'ஸ்டிரைக்'; படப்பிடிப்புகள் பாதிப்பு
சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், 30க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
நடிகர், நடிகையர், வருவாய் பகிர்வு அடிப்படையில், சம்பளத்தை பெற வேண்டும் என, கடந்த ஏப்.,26ம் தேதி நடந்த, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து, அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி, நேற்று காலை தொடங்கிய வேலை நிறுத்தம், மாலை வரை நடந்தது.
இதனால் உள்ளூர், வெளியூரில் நடந்து வந்த 30க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. சூர்யா, சிம்பு, விஜய் சேதுபதி, விஷால், விஜய் ஆண்டனி, ரியோ உட்பட பலர் நடித்து வரும் படப்பிடிப்புகள் ரத்தாகின.
இதனால், பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளர்களின் லாப, நஷ்டங்களில் நடிகர்கள், இயக்குநர்கள் பங்கு கொள்கின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் அப்படி இல்லை. இருக்கும் ஒரு சில தயாரிப்பாளர்கள் கூட, இனி படங்கள் தயாரிப்பரா என தெரியவில்லை.
இது குறித்து, நடிகர் சங்கத்திற்கு மூன்று ஆண்டு களாக பலமுறை தகவல் தெரிவித்துள்ளோம். எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை. அதனால் தான் இந்த வேலை நிறுத்தம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, பெப்சி, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்துள்ளன. நடிகர் சங்கம், ஆரம்பம் முதலே எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.
மிகவும் சோகமான விஷயம் என்னவெனில், இந்த ஸ்டிரைக் ஒருநாள் மட்டும் நடந்ததுதான். காலவரையற்ற ஸ்ட்ரைக் நடந்தால் சினிமா இழுத்து மூடிவிடலாம். இன்றைய தமிழ் சினிமா என்பது காதல் + சண்டை தவிர்த்து வேறெதுவும் இல்லை. மேலும் கறுப்புபண உற்பத்தித் துறையாகவே சினிமா இருக்கிறது. சாதாரண பி காம் படித்த 25 வயது இளைஞர் 500 கோடியில் படம் எடுக்கிறார் என்றால் என்னவென்று சொல்வது?
ஒரு தொழில் சினிமா என்பது... அதில் லாபம் நஷ்டம் இயற்கையானது...
படப்படிப்பை இவர்களே நிறுத்தி தாமதம் செய்தால் நஷ்டம் இவர்களுக்கு மட்டுமே
எனக்கு ஒரு டவுட்டு. புது தயாரிப்பாளர் இந்த ஸ்ட்ரைக் ல இருக்காரா? அதை விட முக்கியமான சமாசாரம் அவன் தயாரிப்பாளர் சங்கத்தில் மெம்பரா இருக்காரா? அவர் இல்லாமலே ஸ்ட்ரைக் நடக்குதா? இந்த ஸ்ட்ரைக் னால அரசியல் வியாதிங்க குறிப்பிடும் ஏழைங்களுக்கு பாதிப்பு உண்டா? அப்புடீன்னா அந்த ஏழைங்களை கை காமிச்சு பொழப்பை ஓட்டும் அரசியல் வியாதிங்களுக்கும் பாதிப்பு உண்டா?
இது நாள் வரை இவ்வளவு சம்பளம் தந்து எப்படி படம் எடுத்தார்கள். இப்போது ஏன் தகராறு? படம் இனி எடுக்காதீங்க? ஏன் நட்டத்தில் படம் எடுத்து புலம்புகிறார்கள் வேலை இல்லாதவர்கள் வேறு வேலைக்கு போவார்கள். நீங்கள் எடுக்கும் தரமற்ற படங்களை ஏன் ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் கொடுத்து பார்க்க வேண்டும்? நீங்கள் 500, 1000 கோடி கலெக்ஷன் என் மார் தட்டிக்கொள்ள வேண்டும்.
இனிமேலாவது நாடு நல்லாருக்குமா?
அப்பாடா ரொம்ப சந்தோஷம் !!!
நடிகர்களை ஒப்பந்தம் செய்யும் போதே குறைந்த பட்சம் இவ்வளவு அதற்கு மேல் இலாபத்தில் பங்கு எனும் முறை கொண்டு வாருங்கள்.
அனைத்து வரவு செலவுகளையும் கணக்கில் கொண்டு வாருங்கள்.எல்லாம் சரியாகி வரும்.
நடிகர், நடிகைகள், இயக்குனர்களின் சம்பளம் மட்டுமே இன்றைய தமிழ் திரைப்படத்தின் 60 முதல்75 சதவீதத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. எல்லாருமான பழைய பெரிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் யாருமே தமிழில் இப்ப திரைப்படமே தயாரிப்பதில்லை. ஒரு காலத்தில் இரவு பகலாக இயங்கிக் கொண்டிருந்த சென்னை திரைப்பட ஸ்டுடியோக்கள் இழுத்து மூடப் பட்டு விட்டன. அனைவரும் ஹைதராபாத்செல்கிறார்கள். எம.ஜி.ஆர்,சிவாஜி கணேசன் போன்ற தயாரிப்பாளர் நலனையும் விரும்பிய நடிகர்கள் இன்று நம்மிடையே இல்லை. தமிழ் திரையுலகின் நிரந்தர சூப்பர்ஸ்டார் எம்.ஜி.ஆர் வாங்கிய அதிக பட்ச சம்பளமே நான்கு லட்சம் தான் எனக் கூறுவார்கள். இன்று விஜய், ரஜினி காந்த் போன்றவர்களின் சம்பளம் சர்வசாதாரணமாக 200 கோடி ரூபாய். இந்நிலை மாற வேண்டும். அப்போதுதான் தமிழ் திரையுலகம் காப்பாற்றப்படும்.
முதல்ல ஒரு சிஸ்டம் உருவாக்கவேண்டும் உழைப்புக்கு ஏற்றே ஊதியம் கொடுக்கவேண்டும் அது தான் சரி அதைவிட்டுவிட்டு நடிகர் நடிகை எல்லாம் ஏகபோக வாழ்க்கை வாழ்வாது மற்றவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் அதே போல் நடிகர் நடிகைகளுக்கு மதசம்பளம் கொடுங்க வேண்டும் அதை விட்டு விட்டு ஒரு படத்துக்கு 200 கோடி 300 கோடின்னு கொடுக்கவேண்டிய அவசியம் இல்ல அவனனுக்கு அந்த தகுதியும் அதனாலே நடிகர் நடிகைகளுக்கு மதசம்பளம் 2 லட்சம் அதற்க்கு மேலே கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை இந்தியாவிலேயே அதிக சம்பளம் நம்முடைய ஜனாதிபதிக்குத்தான் அதைவிட அதிகமாக யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ரஜினிகாந்த சொன்ன மாதிரி சிஸ்டம் இல்ல அதை யார் உருவாக்கவேண்டும் ரஜினி தான் பிள்ளையார் சுழி போடவேண்டும் அதை விட்டு விட்டு 10 காரு 10 வீடு 10 பிசினஸ் 7 லு 8 ட்டு பொண்டாட்டி அறம் தவறி குழந்தைகளை வளர்ப்பது எந்த நடிகராவது ஒழுங்கா இருக்கான்னு சொல்லுங்க அளவுக்கு அதிகமான பணம் என்னசெய்வது என்றே தெரியவில்லை சத்யராஜ் பார்த்த கல்யாணம் பண்ணாமலே பெத்துக்கோ அதற்க்கு சாத்தியராஜ் மக்கள் வேற ஒத்து ஊதுவது இது எல்லாம் கலாச்சார சீர்கேடு அதனாலே திருக்குறளில் உள்ள 1330 குரலையும் படிக்கவேண்டாம் அடலீஸ்ட் ஒரு குரலை படித்து அந்த குரலுக்கு ஏற்றவாறு அறம் தவறாமல் நடக்கவேண்டும் வாழவேண்டும் ...மேலும்
-
முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்வு
-
'டப்பா டிரேடிங்' மோசடிகள் என்.எஸ்.இ., எச்சரிக்கை
-
டிஜிட்டல் லாக்கர் சேவை ஆக்ஸிஸ் வங்கி துவக்கம்
-
கேளுங்கள்: 'கேஷ்லெஸ்' வசதி மறுக்கப்பட்டால் என்ன செய்வது?
-
காரை ஆம்புலன்ஸ் போல மாற்றி உயிர் காக்கும் ராஜஸ்தான் நபர்
-
உண்மை என்ற தராசில் 'தினமலர்' உயர்ந்து நிற்கிறது