தேர்தல் சாதனை ஆட்சியிலும் தொடர விஜய்க்கு தேவை ஒரு சாட்டை!
- எல்.ஆதிமூலம் -
வெளியீட்டாளர், தினமலர்.
நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தல், தமிழக அரசியலை தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது. 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புரட்சியை நிகழ்த்தி காட்டியிருக்கிறார், ஜோசப் விஜய்.
பெயரில் திராவிடம் இல்லாத ஒரு கட்சி இங்கே ஆட்சிக்கு வரவே முடியாது என்ற வாதத்தை தகர்த்திருக்கிறது, அவருடைய தமிழக வெற்றிக் கழகம். ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒளிந்திருக்கும் சவால்கள் ஏராளம்.
அரசு நிர்வாகத்துக்குள் உள்ள அடுக்கடுக்கான திரைகளை, புதிய அரசு கிழிக்க வேண்டியிருக்கும். கிழித்தால் தான், வெளிப்பார்வைக்கு கவர்ச்சியாக காட்டப்பட்ட அழுக்குகளும், அநீதிகளும் வெளிச்சத்துக்கு வரும்; அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் ஊழலுக்கு, எத்தனை ஊற்றுக் கண்கள் என்பதை அடையாளம் காண முடியும்.
திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் ஒரு அங்குலம் கூட முன்னேறவில்லை என்று சொல்ல முடியாது; அதே சமயம், ஊழல் பேயை ஒழித்துக் கட்டியிருந்தால், இன்னும் பல மடங்கு வளர்ச்சியை நம் மாநிலம் கண்டிருக்க முடியும்.
பல திரைப்படங்களில், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை வதம் செய்யும் நாயகனாக விஜய் நடித்திருக்கிறார். இந்த தேர்தல் மூலமாக, ஒரு விரல் புரட்சியை நிகழ்த்தி காட்டியுள்ள இளைஞர் பட்டாளமும், பெண்களும், அந்த காட்சிகளை நிஜத்திலும் அரங்கேற்ற அவரால் முடியும் என்ற நம்பிக்கையில் தான், அவரை கோட்டைக்கு அனுப்பி இருக்கின்றனர்.
ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம் நடத்தினாலே, ஊழல் ஒழிந்து விடும்; மக்கள் எதிர்கொள்ளும் 90 சதவீத பிரச்னைகள் அதன் மூலமாக தீர்ந்து விடும். எதிர்கால இலக்குடன் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க, இந்த வெளிப்படைத்தன்மை நன்கு உதவும்.
இலவசங்களை அள்ளி அள்ளி கொடுத்தும், தமிழக பெண்கள் நம்மை ஏன் நிராகரித்தனர் என்ற கேள்விக்கு, ஆட்சியை இழந்தவர்கள் விடை தேடிக் கொண்டிருக்கின்றனர்; கண்ணை மூடிக் கொண்டு சொல்ல முடியும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை தான் காரணம் என்று!
வேங்கைவயல் தொடங்கி,அண்ணா பல்கலைக் கழக வளாகம் வரை நடந்த சீரழிவுகளுக்கு பின்னணியில் உள்ளவர்கள், இன்னமும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் சுதந்திரமாக திரிகின்றனர். காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதை, நீதிமன்றங்களே வேதனையுடன் சுட்டிக் காட்டும் அவலம் நிலவுகிறது. சாத்தான்குளம் சம்பவத்தில் கிடைத்த நீதி என்பது, ஏனைய அநீதிகளை மறைக்கும் அளவுக்கு கனமான திரை அல்ல.
கட்சிக்காரர்களை காப்பாற்றுவதற்காக காவல் துறையை முடக்குவது விபரீதமான விளையாட்டு. சட்டம் - ஒழுங்கை மட்டுமல்ல, சமூகத்தையே அது நரகக்குழியில் தள்ளிவிடும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அதை காலம் கடந்து புரிந்து கொண்டுள்ளார்.
துவக்கத்தில் இருந்தே காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட்டு, கட்சிக்காரர்களுக்கு கனமான கடிவாளம் மாட்டினால் மட்டுமே, அந்த ஆபத்தில் சிக்காமல், த.வெ.க., அரசு தப்ப முடியும்.
'டாஸ்மாக் கடைகளை மூடுவேன்; நீட் தேர்வை ஒழிப்பேன்' என்று வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை பிடித்த பிறகு, 'ஏன் நிறைவேற்றவில்லை?' என்று கேட்ட ஊடகங்களுக்கு, ஆட்சியாளர்கள் அளித்த எகத்தாளமான பதில்களைக் கண்டு முகம் சுளித்ததை கவனிக்க, ஆட்சியாளர்கள் ஏனோ மறுத்து விட்டனர். எதற்கெடுத்தாலும் திராவிடக் கொள்கை என்ற கேடயத்துடன் மத்திய அரசை எதிர்த்த போக்கை, அதனால் ஏற்பட்ட ஏராளமான திட்ட இழப்புகளை, இளைஞர்கள் அங்கீகரிக்கவில்லை.
ஏற்கனவே இயங்கும் ஆலைகளின் பிரச்னைகளை தீர்த்து வைக்க எந்த முன்னெடுப்பையும் தொடங்காமல், தொழில் முதலீடுகளை ஈர்க்கப்போகிறோம் என்று பெருங்குழுவுடன் நாடு நாடாக பயணம் சென்று வந்து, பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்ததை தொழில் உலகம் கண்டுகொள்ளவில்லை.
சொந்த ஊருக்கு போவதற்கும், திருவண்ணா மலையில் கிரிவலம் செல்வதற்கும் பஸ் வசதி செய்து கொடுக்க இயலாத அரசாங்கம், கட்சிக்காரர்களுக்கு வேலை கொடுப்பதற்காக நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் நடத்துவதை மக்கள் ஜீரணிக்கவில்லை.
ஜாதி ஒழிப்பை திராவிட கொள்கை பிரகடனமாக அறிவித்தவர்கள், அதிலிருந்து வெகுதுாரம் விலகிச் சென்று ஒவ்வொரு ஜாதியாக தலைவர்களை தேடி கண்டுபிடித்து மக்களின் வரிப்பணத்தில் மணி மண்டபம் கட்டித் திறந்ததை அந்தந்த ஜாதியினரே பொருட்படுத்தவில்லை.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை பிழைகள் இருக்கின்றன, அரசு நிர்வாகத்தில். அனைத்தையும் களைந்தால் தான் நல்லாட்சி வழங்க முடியும் விஜய் அரசால். அதற்கு தேவையான அனுபவ அறிவு கொண்டவர்கள் அவரிடம் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பது நாட்டுக்கு தெரியாது.
குறுகிய, சுயநல, திராவிட சித்தாந்த கண்ணோட்டம் இல்லாத உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அனுபவசாலிகள் பலர் இருக்கின்றனர்; அவர்களில் சிறந்தவர்களை துறைவாரியாக அடையாளம் கண்டு ஆலோசகர் குழு உருவாக்கினால், அரசுக்கு நல்ல யோசனைகள் கிடைக்கும்.
நடை, உடை, பேச்சு, பிரசாரம் என பல வகையிலும் இதுவரை தமிழக தலைவர்கள் எண்ணிப் பார்க்காத மாற்றங்களை விஜய் பின்பற்றி வருகிறார். அதே மாற்றத்தை அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் செய்யத் துணிந்தால், த.வெ.க.,வுக்கு ஓட்டு போட்டவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தமிழகம் முன்மாதிரி மாநிலம் ஆகும்.
மிகப்பெரிய சவால் தான்; ஆனால், சாதிக்க முடியாதது அல்ல!
யார் ன்ன பேசினாலும் தேர்தலுக்கு பணம் வேணும். கட்சிக்கு பலதரப்பட்டர் நிதி கொடுப்பார்கள். அது மட்டும் போதாது. எம்ஜியார் செய்தது போல் டாஸ்மாக் மது உற்பத்தியை ஒருவரிடமே கொடுக்க வேண்டும். அதில் வரும் லாபத்தில் எம்ஜியார் காலம் போல் தேர்தலுக்கு அந்த கம்பெனி தேர்தலை பார்த்து கொள்ளும். அதற்க்கு எம்ஜியார் போல் அப்பழுக்கற்ற தலைவர் தேவை. இப்பாட்டி டாஸ்மாக் மது கொள்முதலை மாற்றினால் திமுக, அதிமுக கம்பெனிகளின் ஆதிக்கம் விடுபடும். மத்தியில் பிஜேபி என்ன செய்கிறது. அத்தாணியை பிஜேபி பார்த்துகிறது .அவர் தேர்தல் நிதியாக பிஜேபிக்கு 3000 கோடி கொடுத்துள்ளார். உலகளவில் எல்லா அரசியல் காட்சிகளிழும் இப்படித்தான் பணம் வாங்குகிறார்கள். அரசியல் வாதிகளுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் தியாகிகளாக இருக்கணும் என்று எதிர்பார்க்க கூடாது. தேர்தல் செலவை கட்சி பார்த்து கொண்டாள் ஊழல் குறையும். எப்படியோ தமிழகத்தில் ஒரு புதிய நிலை உருவாக்கி உள்ளது. இதை நல்ல படியாக உபயோகிக்க வேண்டும். மாற்றம் தான் முன்னேற்றத்தின் முதற் படி. .
மாநிலம் வளர மத்திய அரசுடன் முரண்டு பிடிக்காமல் கவர்னரை மதித்து நடக்க வேண்டும். பேக்கஜ் போடுவது தவிர்த்து மக்களை முன்னிலைப்படுத்தினால் மரியாதை வரும். இன்னும் சமூக நீதிக்குள்ளேய சுற்றித்திரிந்தால் ஒருவரும் மதிக்க மாட்டார்கள். திம்க்காவின் அராஜகம் இன்னும் 70க்கு மேற்பட்ட தொகுதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.
திரு ஆதிமூலம் சார் அவர்களின் பதிவு என்னுடய் எதிர்பார்ப்பும் அப்படியே உள்ளது.. விஜய் அவர்கள் எப்படி செயல் படுகிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்போம்... அவருக்கு ஓர் ஆண்டாவது கொடுப்போம் இந்த சாஅகடையய் சுத்தம் செய்ய.. இந்த் தேர்தல் நம்க்கு எடுத்த பாடம்
தமிழக மக்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் களை அடித்து விட்டார்கள். ஒன்று காலம் காலமாக 40 முதல 50 வருடங்களாக கண்மூடித்தனமாக் சின்னம் பார்த்து வாக்களித்து வந்தது. இரண்டு பண்ம் காசு வாங்கி விட்டு மனசாட்சி உறுத்துமே என்று காசு கொடுத்தவருக்கு வாக்களித்தது.. இரண்டில் இருந்தும் தமிழக மக்களை திராவிட அடிமை வாழ்க்கை எனும் விலங்கினை இன்றய இளைஞர்கள் உடைத்து தூக்கி கடாசி உள்ளார்கள்..... இதன் விழைவு ஆட்சிக்கு வந்துள்ளவர்களுக்கும் அடுத்து ஆட்சிக்கு வருபவர்களுக்கும் இதே நிலை உண்டாகலாம் சிறப்பாக் செயல் ஆற்றவில்லை என்றல் என்கிறபயம் உருவாக்கி இருக்கும்.
புதிதாக் அண்ணாமலி கட்சி தனியாக ஆரம்பித்தால் மக்கல் மாற்றாக திராவிட் மாயை இல்லத மாற்று அரசாட்சி விரும்பு அவர்களி வெற்றிபெற செய்வாகள்.
மொத்தத்தில் நமது 1960-2000 தலை முறையினர் 40 முதல் 80 + வயதினர் மாற்றி மாற்றி இரு திராவிட கட்சிகளை தூக்கி எறிய பயந்து மாற்றாக புதிய ஒரு கட்சியய் தேர்ந்து எடுக்கவே பயந்து வாழ்ந்தோம். கூட்ட்டணி எங்கிற பூனை , புலி, சிறுத்தை, சிங்க்கம் என வெவ்வேறு போர்வையய் பயன் படுத்தி நம்மை ஏமாற்றிய இரு திராவிட மாடெல்கள். ஆனால் இனி நாமும் இளைஞர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் கை கோர்த்து அடுத்த் தேர்தலில் 2027 மக்களவை அல்லது 2031 மாநிலங்களவை தேர்தலைல் பங்க்களிப்போம்
Very good article. A well thought one. TheyTVK have to enforce all the points mentioned in your article. Let us wait and see.
சட்டம் ஒழுங்கை உண்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்படவிடனும். ஊழல் இல்லாத நிர்வாகத்தினை கொடுக்கவேண்டும். இவை இரண்டையும் சரியாக செய்தால் மற்றவைகள் தானாகவே சரியாக வந்துவிடும்.
புரையோடிய புண் போன்ற அரசு நிர்வாகத்தை மைனாரிட்டி முதல்வர், அதுவும் தலைமைப் பண்புகளை இன்னும் புரிந்து கொள்ளாத உழைப்பின் அருமை தெரியாத, வெறும் சினிமா வெற்றி மட்டுமே இதுவரை அறிந்த ஒருவர் சீர் திருத்தி விடுவாரா? ஊழல், முறைகேடு, லட்சத்தில் திளைத்த அதிகார வர்க்கம் அதற்கு ஒத்துழைக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்! இந்த தேர்தல் முடிவுகள் கொடுத்த ஒரே ஒரு பாசிட்டிவ் சங்கதி பணம் கொடுத்து மட்டுமே வாக்குகளை இனிமேல் வாங்க முடியாது! மக்கள் சேவையும் கொஞ்சமாவது செய்தே ஆக வேண்டும் என்பதே!
தேர்தலில் சாதனை படைப்பது ஒரு மாயாஜாலம் என்றால், ஆட்சியில் சாதனை படைப்பது ஒரு தவம். விஜய் தனது அரசியல் பயணத்தில் வெற்றிக் கொடியை நாட்டி, அதை மக்கள் நல ஆட்சியாக மாற்ற வேண்டுமானால், கண்டிப்பு, கனிவு மற்றும் கொள்கை உறுதி கொண்ட சாட்டையைத் தன் கையில் ஏந்த வேண்டும். அப்போதுதான் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் சக்தியாக மாறும்
மக்கள் இந்த செயல் விளைவு பொறுத்து தான் தெரியும்
ஊழல்,லஞ்சம் என்ற சூரபத்மனை ஒழித்தல் ஒன்றே விஜயின் வெற்றியாக கருதப்படும் .மாநிலம் இழந்த
செல்வங்களையெல்லாம் மீட்டெடுத்தால் உங்கள் வாக்குறுதிகளையெல்லாம் கஜானாவில் கைவைக்காமல் நிறைவேற்றிவிடலாம் .
உங்கள் திரை துறையை சேர்ந்த அவலங்களை கலையவேண்டும். புதிய படங்களை வெளியிட முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளருக்கு உதவுங்கள். கமல், ரஜினி போன்றவர்கள் தங்களது சுயலத்துக்கா திராவிட மாடல் அரசுக்கு கைக்கூலியாக, சன், ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு விலை போக்கிவிட்டார்கள் என்பதை மறந்துவிட கூடாது. திரை துறை, சாராய ஆலைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதாக்களை ஒலித்துகட்டவேண்டும். கோடி, கோடியாக அரசு சொத்துக்களை கொள்ளை அடித்து வைத்திருக்கும் முன்னாள் மந்திரிகளை சட்டப்படி தண்டிக்கவேண்டும். சபரீசன், உதயநிதி , உதய நிதி நண்பர்கள், துரைமுருகன், நேரு, பாலு, பொன்முடி, ஏவ வேலு. சேகர்பாபு,... போன்றோர்கள் சட்டத்துக்கு புறம்பாக நடத்து தொழில்கள்... மீது சட்டப்படி நடவடிக்கை பாயவேண்டும்.மேலும்
-
இபிஎஸ் உடன் தவெக ஆனந்த் சந்திப்பு
-
தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரம்
-
இன்று மதியம் 2 மணிக்கு முடிவை அறிவிக்கிறார் சோடங்கர்
-
உடைகிறதா அதிமுக?: எம்எல்ஏ கூட்டத்தை தள்ளிவைத்தார் இபிஎஸ்
-
கட்சியை காப்பாற்றுவாரா இபிஎஸ்?: விஜய் ஆட்சிக்கு ஆதரவு அளித்தால் தப்பிப்பார்
-
முதல்வரின் தோல்வி வருத்தம் தரக்கூடியது; காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்