பளுதுாக்குதல்: யாஷ் 'வெள்ளி' * ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில்
இஸ்மெய்லியா: ஜூனியர் உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் யாஷ், வெள்ளிப்பதக்கம் வென்றார்.
துருக்கியின் இஸ்மெய்லியா நகரில் ஜூனியர் உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 71 கிலோ பிரிவு போட்டியில் இந்தியா சார்பில் யாஷ் கந்தகலே பங்கேற்றார். முதலில் நடந்த ஸ்னாட்ச் பிரிவில் யாஷ், 140 கிலோ எடை துாக்கி, வெள்ளி வென்றார்.
அடுத்து நடந்த 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் யாஷ், 169 கிலோ துாக்க, வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார். ஒட்டுமொத்தமாக 309 கிலோ துாக்கி, இரண்டாவது இடம் பிடித்த யாஷ், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். பிலிப்பைன்சின் ஆல்பர்ட் (326 கிலோ), ஈகுவடாரின் ஜிம்மி லோபெஸ் (301) தங்கம், வெண்கலம் வென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இபிஎஸ் உடன் தவெக ஆனந்த் சந்திப்பு
-
தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் விவகாரம்
-
இன்று மதியம் 2 மணிக்கு முடிவை அறிவிக்கிறார் சோடங்கர்
-
உடைகிறதா அதிமுக?: எம்எல்ஏ கூட்டத்தை தள்ளிவைத்தார் இபிஎஸ்
-
கட்சியை காப்பாற்றுவாரா இபிஎஸ்?: விஜய் ஆட்சிக்கு ஆதரவு அளித்தால் தப்பிப்பார்
-
முதல்வரின் தோல்வி வருத்தம் தரக்கூடியது; காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
Advertisement
Advertisement