ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம் திறப்பு


ஈரோடு:முன்னாள் நிர்வாகி கட்சி தாவியதால், சீரமைக்கப்பட்ட மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம் திறக்கப்பட்டது.

ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கே.வி.ராமலிங்கம், அ.தி.மு.க.,வின் வேலுமணி - சி.வி.சண்முகம் அணிக்கு ஆதரவாக செயல்பட்டார் எனக்கூறி, அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, ஈரோடு பகுதி செயலர் மனோகரனை மாவட்ட செயலராக இ.பி.எஸ்., அறிவித்தார். இப்பிரச்னையால் கடந்த சில நாட்களாக, ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள அ.தி.மு.க., மாவட்ட அலுவலகத்தை மனோகரன் பூட்டி வைத்திருந்தார்.


இந்நிலையில் அலுவலகத்தை சீரமைத்து, முன்னாள் எம்.எல்.ஏ., பாலு மூலம், மனோகரன் நேற்று திறந்து வைத்தார்.
இதில் முன்னாள் எம்.பி., செல்வகுமாரசின்னையன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, சிவசுப்பிர
மணியம், முன்னாள் மேயர் மல்லிகா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement