பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு; 12 நாட்களில் 5வது முறையாக மாற்றம்
சென்னை: தமிழகம் உட்பட நாடு முழுவதும், இன்றும் (மே 26) பெட்ரோல் விலை லிட்டருக்கு, 24 காசுகள்; டீசல் லிட்டருக்கு, 23 காசுகள் அதிகரித்தன. கடந்த, 12 நாட்களில் மட்டும், 5வது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளன.
நம் நாட்டில் பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், டீலர்கள் வாயிலாக பெட்ரோல், டீசல் விற்கின்றன.
மேற்காசிய நாடுகளில், கடந்த மார்ச்சில் ஏற்பட்ட போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், விலை மிகவும் அதிகரித்து வருகிறது.
இதனால், நம் நாட்டில், இம்மாதம், 15ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.14 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு, 3.11 ரூபாய் உயர்த்தப்பட்டன. பின், 19ம் தேதி, பெட்ரோல் லிட்டருக்கு, 82 காசு, டீசல் லிட்டருக்கு, 86 காசு அதிகரிக்கப்பட்டன. மீண்டும், 23ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு, 82 காசு, டீசல் லிட்டருக்கு, 87 காசு உயர்த்தப்பட்டன.
அன்று, தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல், 105.31 ரூபாய்க்கும், லிட்டர் டீசல், 96.98 ரூபாய்க்கும் விற்பனையாகின. நேற்று மீண்டும் பெட்ரோல் லிட்டருக்கு, 2.46 ரூபாய், டீசல் லிட்டருக்கு, 2.58 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் லிட்டர், 107.77 ரூபாய்க்கு விற்பனையானது. லிட்டர் டீசல், 99.56 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றும் உயர்வு
இந்நிலையில் இன்றும் (மே 26) பெட்ரோல் விலை லிட்டருக்கு, 24 காசுகள்; டீசல் லிட்டருக்கு, 23 காசுகள் அதிகரித்தன. கடந்த, 12 நாட்களில் மட்டும், 5வது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.108.01க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.78க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வாசகர் கருத்து (13)
venugopal s - ,
26 மே,2026 - 10:57 Report Abuse
ஆந்திராவில் தான் பெட்ரோல் விலை இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக உள்ளது. எதற்கு எடுத்தாலும் சந்திரபாபு நாயுடுவை புகழும் அவரது ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? 0
0
Reply
RAVINDRAN.G - CHENNAI,இந்தியா
26 மே,2026 - 09:59 Report Abuse
அடுத்த ஆட்சி காங்கிரஸ் தான். சந்தேகமே இல்லை 0
0
vivek - ,
26 மே,2026 - 10:57Report Abuse
காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால் பெட்ரோல் லிட்டர் இருநூறு மட்டுமே 0
0
Reply
பிரேம்ஜி - ,
26 மே,2026 - 09:08 Report Abuse
இப்படியே ஏறிக் கொண்டே இருந்தால் செத்துப் போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் திரும்ப ஆட்சிக்கு வந்துடும்! மக்கள் யோசித்து ஓட்டு போடுவதில்லை! விலைவாசி ஏறினால் ஆளுங் கட்சி அவுட்! 0
0
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
26 மே,2026 - 09:55Report Abuse
இதை சொன்னால் இவர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் ... 0
0
Reply
Raghu - ,இந்தியா
26 மே,2026 - 08:29 Report Abuse
என் பைக்கிற்கு பெட்ரோல் நிறப்ப என் வங்கிக் கணக்கு இருக்கும் வங்கிக்கு சென்று பர்ஷனல் லோன் வேண்டும் என்று கேட்டிருக்கிறேன் விரைவில் தருவதாக சொல்லியிருக்கிறார்கள் 0
0
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
26 மே,2026 - 10:01Report Abuse
டாஸ்மாக்கில் எக்ஸ்ட்ரா பத்து ருபாய் கொடுத்து சரக்கு வாங்குவதற்கும் அதே வங்கி தான் லோன் கொடுத்ததையும் சொல்லி விடுங்களேன்....!!! 0
0
பாமரன் - ,
26 மே,2026 - 10:23Report Abuse
மத்திய அரசின் டகல்பாஜி வேலையை எதிர்த்து கேட்கும் எல்லாரும் டாஸ்மாக் கஸ்டமரா கண்டுபிடிக்கும் அசிங்க பீஸ்கள் போனால் தான் இந்த இடம் சுத்தமாகும்... தமிழ் நாட்டில் தாமரை மல்லாந்துடும் ... இவனுவ பாதிக்கப்பட்டு ரகசியமாக அழுதுகொண்டே மத்தவங்களை திட்டறானுவ... 0
0
guna - ,
26 மே,2026 - 10:38Report Abuse
முடிந்தால் டாஸ்மாக் போகவும் பெர்சனல் லோன் எடுத்துக்கொள்... 0
0
krish - ,
26 மே,2026 - 11:04Report Abuse
இந்த பிழைப்புக்கு நீ நடந்தோ, சைக்கிள் போகலாமே 0
0
Reply
அப்பாவி - ,
26 மே,2026 - 08:23 Report Abuse
அசுர வளர்ச்சியா இருக்கே. நாடு தாங்குமா? மெடல் ஒரு நூறு ஆர்டர் குடுத்துருங்க. 0
0
Reply
Alphonse Mariaa - Coimbatore,இந்தியா
26 மே,2026 - 07:50 Report Abuse
ப்ரெண்ட் கச்சா ஆயில் $86 டாலர் ஒரு பேரல். அரசு கூடிய விரைவில் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் 0
0
Thirumal Kumaresan - singapore,இந்தியா
26 மே,2026 - 09:42Report Abuse
வாங்கி அங்கிருந்து விட்டு எறிந்தால் நாம் உபயோகிக்க முடியுமா. ஆனால் ஒரு நெருடல் டெய்லி ஏற்றிக்கொண்டிருப்பது அரசின் மேல் அதிருப்தியை தான் கொண்டு வரும், ஆனால் உங்கள் நண்பரை போரை நிறுத்த சொல்லலாம் 0
0
Reply
மேலும்
-
மோடி பிரதமராக பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டு நிறைவு; நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர்கள் பட்டியலில் 2வது இடம்!
-
அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; உபியில் பஸ் கவிழ்ந்து பயணிகள் 6 பேர் பரிதாப பலி
-
தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் சரிவு; இன்றைய நிலவரம்!
-
ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்; ஏமாற்றும் அரசும் நிலைக்காது என்கிறார் இபிஎஸ்
-
கேபிள் கார் கோளாறால் அந்தரத்தில் தவித்த 300 பேர்; பத்திரமாக மீட்டது மீட்பு படை
-
சிறைக்குள் கஞ்சா பந்து வீசியது குறித்து விசாரணை
Advertisement
Advertisement