கார் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி பலி

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே கார் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்தானங்கூர் எம்ஹவுஸ் சர்ச் அருகே நேற்று இரவு 7:00 மணியளவில் 65 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத மூதாட்டி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்தார். அப்போது அவ்வழியாக வந்த  ஸ்கார்பியோ கார் மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement