டூவீலர் மோதி ஒருவர் பலி

தேவதானப்பட்டி, ஜூன் 2-

பெரியகுளம் ஒன்றியம், ஜி கல்லுப்பட்டி சூசையப்பர் தெருவை சேர்ந்தவர் சப்பானி 65. மே 30ல், ஜி கல்லுப்பட்டியில் ரோட்டை கடந்து செல்லும் போது இவர் மீது டூவீலர் மோதியது. காயமடைந்த சப்பானி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இறந்தார். புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய கெங்குவார்பட்டியைச் சேர்ந்த காமராஜிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement