மீனவர் தற்கொலை

சிக்கல்: வாலிநோக்கம் சாத்தப்ப அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் மீனவர் கார்த்திக் 30, இவர் துாத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தில் மீன்பிடித் தொழில் செய்கிறார். இந்நிலையில் குடும்பத்தில் சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். சிக்கல் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரிக்கிறார்.

Advertisement