பொற்சோதிநாதர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், ஒழையூரில் அறம் வளர்த்த நாயகி உடனுறை பொற்சோதிநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 5ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கியது.

நேற்று காலை 6:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும். காலை 9:45 மணிக்கு கலசம் புறப்பாடும், தொடர்ந்து கோவில் கோபுரத்திற்கும், மூலவர் சன்னிதி, பரிவார மூர்த்திகளுக்கும் வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது.

Advertisement